பல மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடி இசைவிழாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துக் கொண்டவர் அனுராதா ஸ்ரீராம். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பம்பாய் திரைப்படத்தில் மலரோடு மலர்ந்து என்ற பாடலை பாடி சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.
அனுராதா சினிமா பாட்டுகளை கடந்து பக்தி பாடல்கள் பாடியிருக்கிறார். தற்சமயம் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார்.
அனுராதா ஸ்ரீராம் இசை கலைஞரான ஸ்ரீராம் பரசுராம் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஜெயந்த், லோகேஷ் என்று இரு குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில், அனுராதா ஸ்ரீராம் தன்னுடைய கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார் அது சமூக வலைதள வாசிகள் இடையே வைரலாகி வருகிறது.