கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் பிஜேபியைச் சார்ந்த இளைஞர் அணி வீரர்கள் இருவர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் என்ற பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணியில் இருப்பவர்கள் தினேஷ் மற்றும் விஷ்ணு. நேற்று இவர்கள் இருவரும் தங்களது வீட்டில் இருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் வந்து இவர்கள் இருவரையும் தாக்கினர். இச்சம்பவத்தால் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இந்த தாக்குதல் சம்பவத்தின் போது அதனை தடுக்க முயன்ற விஷ்ணுவின் தாயாருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காயமடைந்த மூன்று பேரும் ஆலத்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து அவர்களின் மீது தாக்குதல் நடத்திய அடையாளம் தெரியாத நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். கேரள மாநிலத்தில் அரசியல் தொடர்பான தாக்குதல்கள் அவ்வப்போது நடைபெறும். அதே போன்ற ஒரு சம்பவம் நேற்று நடைபெற்றிருக்கிறது. இது நம் மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.