காஞ்சிபுரம் மாவட்டத்தை அடுத்துள்ள புல்லலூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் 9ம் வகுப்பு படித்து வந்திருக்கிருக்கிறார். அவருக்கு திடீரென்று வாந்தி, மயக்கம் உள்ளிட்டவை ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக பதறிப்போன அந்த மாணவர்களின் பெற்றோர் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த மாணவி 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்கள்.
ஆனால் இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத அந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்து போயினர் மேலும் இது குறித்து மாணவியிடம் கேட்டபோது கோவிந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன் (21) என்ற நபர் என்னிடம் நட்பாக பேசிப்பழகி, அடிக்கடி பரிசு பொருட்களை வாங்கி கொடுத்து நெருங்கி பழகி வந்தார் எனவும், ஆசை வார்த்தை கூறி என்னை பலாத்காரம் செய்தார் என்றும் அந்த மாணவி கதறியபடி கூறி இருக்கிறார்.
இந்த சம்பவம் குறித்து மாணவியன் பெற்றோர் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினர் அந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கல்லூரி மாணவன் லோகநாதனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.