மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் அப்ரண்டீஸ் பணிகளில் 5000 காலியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்காக தற்போது அந்த நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தப் பணிகளுக்கு தமிழ்நாட்டில் 230 காலியிடங்களும் பாண்டிச்சேரியில் 1 காலிடமும் உள்ளன. மீதமுள்ள காலியிடங்கள் பிற மாநிலங்களில் நிரப்பப்பட இருக்கின்றன. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிப்போருக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகவும் உச்சபட்ச வயது வரம்பு 28 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பிற்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு மாதச் சம்பளமாக ரூபாய் 10,000 முதல் ரூபாய் 15,000/- வரை வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒப்பந்தம் அடிப்படையிலான பணியாகும். தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் ஒரு வருட ஒப்பந்தத்தில் பணியமர்த்தப்படுவார்கள். பணித்திறன் அடிப்படையில் மூன்றாண்டுகள் வரை ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் 03.04.2023 தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை Apprenticeshipindia.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் திறனாய்வு தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிற தகவல்களை அறிய centralbankofindia.co.in என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.