7 ஆம் வகுப்பு மாணவனை சரமாரியாக தாக்கிய பி.டி சார்! மாணவன் மருத்துவமனையில் அனுமதி!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி சார்ந்த மாணவனை அங்குள்ள பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பிரம்பால் தாக்கியதில் படுகாயமடைந்ததால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நெய்க்காரம்பட்டி அரசு உதவி பெறும் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்திருக்கிறான் ஹரிராம்.. இவரது தந்தையின் பெயர் கார்த்திகேயன் மற்றும் தாயாரின் பெயர் காளீஸ்வரி. பள்ளிக்குச் சென்று வந்த மாணவனின் கை, கால் பகுதிகளில் காயம் காணப்பட்டிருக்கிறது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவனிடம் விசாரித்து இருக்கின்றனர்.


சக மாணவர்களோடு ஏற்பட்ட தகராறு குறித்து விசாரித்த போது உடற்கல்வி ஆசிரியர் கடுமையாக தாக்கியதில் இந்த காயங்கள் ஏற்பட்டதாக மாணவன் அவனது பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறான். இதனைத் தொடர்ந்து பதறிய பெற்றோர் மாணவனை அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 12 வயது சிறுவனை ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ள சம்பவத்திற்கு எதிராக பல்வேறு மக்களும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். ஆசிரியர்கள் மாணவர்களை தண்டிக்க வேண்டும் தான் ஆனால் இது போன்று கண்மூடித்தனமாக தாக்க கூடாது என தங்களது கருத்துக்களை கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

கால்வாயில் சடலமாக கிடந்த தொழிலாளி..!! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!!

Sun Mar 26 , 2023
தருமபுரி மாவட்டம் மூக்காரெட்டிபட்டி பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நந்தினி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த 22ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற சண்முகம் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சண்முகத்தை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இந்நிலையில், நந்தினி உறவினரான வினோத் என்பவரிடம் தனது கணவர் குறித்து விசாரித்துள்ளார். அப்போது வாணியாறு கால்வாய் […]
death

You May Like