மாணவர்களே கவனம்… நாளை மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்…! இல்லை என்றால் சிக்கல்….

கால்நடை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு ஆன்லைன் மூலம் நாளை மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் B.V.Sc., & AH, B.Tech., படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் உள்ள 680 இடங்களில் சேர இதுவரை சுமார் 20,000 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் நாளை மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள வரும் 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. NRI மாணவர்கள் வரும் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், திருத்தம் மேற்கொள்ளவும் https://adm.tanuvas.ac.in இணையதளத்தை அணுக வேண்டும் என்றும் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக சேர்க்கைக் குழு அறிவித்துள்ளது.

Vignesh

Next Post

இன்று முதல் 5-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு...! மீனவர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்...!

Sun Oct 2 , 2022
தமிழகத்தில் வரும் 5-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக; இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனீ, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. […]

You May Like