உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் 16 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோரை கோடாரியால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. உத்தர பிரதேசம் மாநிலம் புலந்த்ஷாஹர் பகுதியைச் சார்ந்தவர் சபீர்(45) இவரது மனைவி ரிஹானா(42) இவர்கள் இருவரும் தங்களது 16 வயது மகளுடன் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஷபீரும் ரிஹானாவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னாடி சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தியதில் அவர்களது வீட்டிலிருந்து ரத்தம் தோய்ந்த கோடரி ஒன்று கைப்பற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விசாரணையை தீவிர படுத்திய காவல்துறை இந்த கொலைக்கு யார் காரணம்? என தீவிரமாக தேடியதில் அவர்களுக்கு கிடைத்த தகவல்களும் ஆதாரங்களும் அதிர்ச்சியடையச் செய்தன. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய காவல்துறையினர் “சபீர் மற்றும் ரிகானா கொலை வழக்கில் அவர்களது 16 வயது மகள் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அந்த சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. சிறுமி ஆண் நண்பர்களுடன் பழகி வந்ததாகவும் இதனைப் பெற்றோர் கண்டித்ததால் அவர்களை கொலை செய்ய முடிவு செய்து தனது ஆண் நண்பர்களின் உதவியுடன் அவர்களது உணவில் போதை மாத்திரை கலந்து வைத்து அதை சாப்பிட்ட பின் அவர்கள் மயங்கியதும் கோடாரியால் வெட்டி கொலை செய்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார். தற்போது காவல்துறையினர் சிறுமிக்கு போதை மாத்திரை வழங்கிய அந்த சிறுமியின் நண்பரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.