சென்னை ஆவடி பகுதியைச் சார்ந்த ஜிம் மாஸ்டரும் ஆணழகன் பட்டம் வென்றவருமான ஆகாஷ் என்ற இளைஞர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை ஆவடி பகுதியில் உள்ள ஜிம் ஒன்றில் பயிற்சியாளராக பணியாற்றி வந்தவர் ஆகாஷ். மேலும் இவர் மாவட்ட மற்றும் மாநில அளவிலான பாடி பில்டிங் ஆணழகன் போட்டிகளிலும் கலந்து கொண்டு வந்தார். இவர் சில போட்டிகளில் பட்டம் பெற்று ஆணழகனாகவும் இருந்திருக்கிறார். திடீரென இவருக்கு ரத்த வாந்தி ஏற்படவே அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து இருக்கின்றனர். அங்கு அவரை சோதித்த மருத்துவர்கள் இரண்டு கிட்னியும் செயலிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் உடலின் பல பாகங்களும் செயல் இழந்ததால் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார் ஆகாஷ்.
அதிகப்படியான தசை வளர்ச்சி மற்றும் செயல்திறனிற்காக பயன்படுத்தப்படும் ஸ்டிராய்டு மற்றும் மாத்திரைகளின் பக்கவிளைவினால் ஆகாஷிற்கு இது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. வலுவான தசைகள் வேண்டி கடந்த மூன்று வருடங்களாக இது போன்ற மருந்துகளை அவர் தொடர்ந்து எடுத்து வந்ததாக தெரிகிறது. இந்த மருந்துகளின் பக்க விளைவினால் அவரது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக ஒரே நேரத்தில் செயலிழந்து நேற்று பரிதாபமாக உயர்ந்திருக்கிறார். இச்சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் முறையான பயிற்சியாளரின் வழிகாட்டுதலுடன் முறையான ஊட்டச்சத்து நிபுணர்களைக் கொண்டு நம் உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் சத்துணவுகளை உடற்பயிற்சிகளின் போது அமைத்துக் கொள்ள வேண்டும்.