குஜராத் மாநிலத்தில் கருக்கலைப்பு செய்யப்பட்ட பெண்ணின் சிசுவை மாடியிலிருந்து தூக்கி வீசியதால் போக்குவரத்து மிகுந்த சாலைகளில் வந்து விழுந்தது புதிதாகப் பிறந்து இறந்த குழந்தையின் உடல் சாலையில் கடந்ததால் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக செவிலியர் உட்பட 3 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. குஜராத்தின் சூரத் பகுதியிலுள்ள போக்குவரத்து மிகுந்த சாலையில் பச்சிளம் சிசுவின் உடல் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இத்தகவலின் அடிப்படையில் பகுதிக்கு வந்த காவல்துறையினர் இறந்த சிசுவின் சடலத்தை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை செய்தனர்.
காவல்துறையின் தீவிர விசாரணையில் இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். தீவிர விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அங்கிருந்த கட்டிடத்தின் மீதிருந்து செவிலியர் ஒருவர் சிசுவின் உடலை கீழே வீசுவது போன்ற காட்சியை படமாக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட காவல்துறை மகாராஷ்டிரா மாநிலத்தைச் சார்ந்த தம்பதியினர் விம்பாயத் என்ற பகுதியில் கருக்கலைப்பு செய்ததை கண்டுபிடித்தனர். அந்தக் கருவை செவிலியர் ரோட்டில் வீசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.