மிகவும் பிரபலமான உலக தலைவர்கள் பட்டியல்.. பிரதமர் மோடி மீண்டும் முதலிடம்..!!

சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, பிரதமர் நரேந்திர மோடி, உலகத் தலைவர்களின் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்..

மார்னிங் கன்சல்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள உலகத் தலைவர்களின் அங்கீகார மதிப்பீட்டில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். பிரதமர் மோடிக்கு 76 சதவீத ஒப்புதல் மதிப்பீடு கிடைத்துள்ளது.. பிரபலத்தின் அடிப்படையில் எந்த உலகத் தலைவரும் பிரதமர் மோடியை நெருங்கவில்லை என்பதை ஒப்புதல் மதிப்பீடு காட்டுகிறது. இருப்பினும், பிப்ரவரியில் 78 சதவீதமாக இருந்த பிரதமர் மோடியின் மதிப்பீட்டில் சிறிது குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த மதிப்பீட்டின்படி, மெக்சிகோவின் ஜனாதிபதி ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் 61 சதவீத ஒப்புதல் மதிப்பீட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.


இந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மூன்றாவது இடத்தில் உள்ளார். அவர் 55 சதவீத உலகளாவிய தலைவர் ஒப்புதல் மதிப்பீட்டைப் பெற்றுள்ளார். அதே நேரத்தில், இத்தாலியின் பிரதமர் ஜார்ஜியா மெலோனி 49 சதவீத ஒப்புதல் மதிப்பீட்டுடன் 4-வது இடத்தில் உள்ளார். பிரேசில் ஜனாதிபதி லுலா டி சில்வாவும் 49 சதவீத மதிப்பீட்டுடன் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்க அதிபர் ஜோ பிடன், குளோபல் லீடர் அப்ரூவல் ரேட்டிங் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளார். பிடனுக்கு 41 சதவீதம் மட்டுமே அங்கீகாரம் கிடைத்துள்ளது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 39 சதவீத அங்கீகாரத்துடன் 7-வது இடத்தைப் பிடித்துள்ளார். ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் 38 சதவீத ஒப்புதல் மதிப்பீட்டுடன் 8வது இடத்தில் உள்ளார்.. ஜெர்மனியின் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் 35 சதவீத மதிப்பீட்டுடன் 9-வது இடத்தில் உள்ளார். பிரிட்டனின் பிரதமர் ரிஷி சுனக் 10வது இடத்தில் உள்ளார். அவரது உலகளாவிய தலைவர் ஒப்புதல் மதிப்பீடு 34 சதவீதம்.

வாஷிங்டைனை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும், Morning consult என்ற கருத்துக்கணிப்பு நிறுவனம், உலகம் முழுவதும் மாறிவரும் அரசியல் நிகழ்வுகள் பற்றிய நிகழ்நேர நுண்ணறிவை ஆய்வு செய்து வருகிறது. அதில் உலகத் தலைவர்களின் தலைமைப் பண்பு, மக்கள் செல்வாக்கு ஆகியவை குறித்து ஒவ்வொரு நாட்டிலும் வயது, பாலினம், அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தி வருகிறது.. மேலும் சில நாடுகளில், அதிகாரப்பூர்வ அரசாங்க ஆதாரங்களின் அடிப்படையில் இந்த கணக்கெடுப்புகள் நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது..

RUPA

Next Post

காணாமல் போன நகையை கண்டுபிடிக்க தவறியதால், மூதாட்டிக்கு புதிய சங்கிலி வாங்கிக்கொடுத்த காவல்துறை அதிகாரி..

Sun Apr 2 , 2023
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள, பசம்பலக்கோடு பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார்.. 2 ஆண்டுகளுக்கு முன்பு தன்னிடம் இருந்த ஒன்றரை சவரன் தங்கச் சங்கிலி தொலைந்து போனதாக, ஒட்டப்பாலம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்திருந்தார்.. 2019 பிப்ரவரியில் எக்ஸ்ரே எடுப்பதற்காக ஓட்டப்பாலம் தாலுகா மருத்துவமனைக்கு அந்த மூதாட்டி சென்ற போது இந்தச் சம்பவம் நடந்தது. எக்ஸ்ரே எடுக்கப்பட்ட போது, ​​சங்கிலியை கழற்றுமாறு தன்னிடம் கேட்கப்பட்டதாகவும், […]
569d31df10de103b24ad64bf16463514ec7dfe6a5d0a84d8f38489bbfdc97ab6

You May Like