கேரள மாநில பகுதியில் உள்ள மண்ணுத்தி கிராம தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அந்த சிறுவனுக்கு டியூசன் எடுத்து வந்த ஆசிரியர் ஒருவர் அந்த மாணவருக்கு மதுகொடுத்து வன்புணர்வு செய்துள்ளார்.
பாதிப்படைந்த மாணவன் சில நாட்களாக யாரிடமும் பேசாமல் தனிமையிலே இருந்துள்ளான். இதுகுறித்து அவனது நண்பர்களிடம் விசாரித்தபோது, சமீபத்தில் நடந்த தேர்விலும் அவன் குறைந்த மதிப்பெண்களே எடுத்துள்ளான். அதனால் அவன் சக மாணவர்களுடன் எப்போதும் போல பழகாமல் விலகியே இருந்துள்ளான் என்று நினைத்துக் கொண்டனர்.
ஆனால், அதிக மதிப்பெண் பெறுவதற்காக அந்த பகுதியில் ஒரு ஆசிரியையிடம் டியூசன் சென்ற நிலையில், பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியை, அதை மறந்து விட்டு 16 வயது மாணவனக்கு மது கொடுத்து பலாத்காரம் செய்துள்ளார் என தெரிய வந்ததுள்ளது. இதனை தொடர்ந்து, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ்வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.