கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகேவுள்ள உண்ணியூர் கோணத்தைச் சார்ந்த பெண் தானே ஆல் செட் செய்து தன் மீது ஆசிட் வீச்சு தாக்குதல் நடத்தச் சொன்ன சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள உண்ணியூர் கோணம் பகுதியைச் சார்ந்தவர் லதா 45 வயதான இவர் கணவனைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவரது மகனான சுபாஷ் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். வீட்டில் தனியாக இருப்பதற்கு பதிலாக ஏதேனும் ஒரு தொழில் செய்யலாம் என நினைத்து அவரது உறவினரான ஜெஸ்டின் கிருபை தாஸ் என்பவரின் உதவியுடன் அரவை மேல் ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி இரவு தனது மில்லை பூட்டிவிட்டு பேருந்தின் மூலம் சொந்த ஊர் திரும்பி இருக்கிறார் லதா. பின்னர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி தனது வீடு நோக்கி நடந்து கொண்டிருக்கும்போது பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நான்கு பேர் அவரது கை மற்றும் உடலின் பாகங்களில் ஆசிட்களை ஊற்றினர். இதில் வலியால் துடித்த லதாவை அப்பகுதி மக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆசிட் வீச்சு சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர் அதன் அடிப்படையில் ராதாவின் உறவினர்களான ஜஸ்டின் கிருபை தாஸ் ஜஸ்டின் ராபின்சன் ஷாரீன் மற்றும் அஜித் குமார் ஆகியோரை கைப்பற்றி அவர்களிடம் விசாரணை செய்ததில் லதா தான் காசு கொடுத்து அவரது உடல் மற்றும் கையில் பகுதிகளில் ஆசிட் அடிக்கச் சொன்னதாக உண்மையை ஒத்துக் கொண்டனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளித்துள்ள லதா தனக்கு வீடு கட்டும் போது 50 லட்ச ரூபாய் கடன் தந்ததாகவும் அதனை சமாளிக்க பல்வேறு வகைகளில் முயன்றும் முடியாததால் இந்த திட்டத்திற்கு தள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது