அமரர் கல்கி சோழ சாம்ராஜ்யம் பற்றி எழுதிய வரலாற்று புத்தகமான பொன்னியின் செல்வன் இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் 2 பாகங்களாக படம் ஆகி இருக்கிறது.
இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகம் வரும் 28ஆம் தேதி வெளியாகும் என்று பட குழுவினர் ஏற்கனவே அறிவித்திருக்கின்றனர். இந்த திரைப்படத்தின் பிரமோஷன் பல்வேறு மாநிலங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், நேற்று டெல்லியில் விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, சோபிதா, ஐஸ்வர்யா லட்சுமி, கார்த்தி போன்றோர் டெல்லிக்கு சென்று அங்கே பிரமோஷன் செய்தனர்.
இந்த திரைப்படத்தில் ரசிகர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்த ஒரு கதாபாத்திரம் ஆதித்த கரிகாலன்.
இந்த சூழ்நிலையில், ஆதித்த கரிகாலனாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிப்பதற்கு நடிகர் விக்ரம் 12 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி இருக்கிறார் என்ற விவரம் தற்போது கிடைத்துள்ளது.