இனி காலை 6.30 மணி முதல் 11:30 வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும் என பாட்னா மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதை கருத்தில் கொண்டு, பாட்னா மாவட்ட நிர்வாகம் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் நேரத்தை மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இனி காலை 6.30 மணி முதல் 11:30 வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும். இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இது குறித்து பாட்னா மாவட்ட ஆட்சியர் டாக்டர் சந்திரசேகர் சிங், அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், அனைத்துப் பள்ளிகளுக்கும் நேரத்தை மாற்றியமைக்குமாறு கேட்டுக் கொண்டார். தற்போதைய வானிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, அலுவலக உத்தரவு சட்டம், திருத்தப்பட்டுள்ளது மற்றும் அனைத்து வகுப்புகளுக்கும் காலை 11:30 க்குப் பிறகு இயங்க தடை செய்யப்பட்டுள்ளன, ”என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவில் கூறியுள்ளார்.