தமிழக சட்டப்பேரவையில் இருந்து திடீரென்று வெளியேறியது ஏன்……? ஆளுநர் ஆர் என் ரவி விளக்கம்…..!

மாநில அரசு உடனான அனுபவம் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர் என் ரவி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார். அதில் கோவை கார் குண்டுவெடிப்பு, கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மீதான தாக்குதல், தூத்துக்குடியில் கிராம நிர்வாக அலுவலர் கொலை போன்ற பல்வேறு சம்பவங்களை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.


ஏற்கனவே பாகிஸ்தானில் இருந்து தமிழகத்திற்கு போதை பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கடத்தப்படுவதாக மத்திய உளவுத்துறை எச்சரித்து இருந்ததாகவும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகின்ற நிலையில், தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது என்று எவ்வாறு கூற இயலும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஆ.என். ரவி.

அத்துடன் திராவிட மாடல் என்ற ஒன்றே கிடையாது எனவும், ஒரே நாடு, ஒரே பாரதம் என்ற முழக்கத்திற்கு எதிரானது தான் இந்த திராவிட மாடல் வாசகம் என்றும் சுதந்திரப் போராட்டத்தை குறைத்து மதிப்பிடுவது தான் திராவிட மாடல் என்ற முழக்கம் என கூறியுள்ளார் ஆளுநர்.

இதனால் தான் சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் இடம்பெற்று இருந்த சில பகுதிகளை நீக்கிவிட்டு வாசித்தேன் என்று கூறியுள்ளார். அதோடு, தன்னுடைய உரைக்குப் பின்னர் ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசிப்பதற்காக காத்திருந்ததாகவும், ஆனால் சபாநாயகர் உடன் ரகசியமாக உரையாற்றி முதல்வர் தனக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்ததாகவும் கூறியுள்ளார் ஆளுநர்.

இதன் காரணமாகத்தான் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இருந்து பாதியில் தான் வெளியேறிதாக ஆளுநர் விளக்கம் அளித்திருக்கிறார்.

பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு எதிராக சித்தா பல்கலைக்கழக மசோதா இருப்பதாகவும், பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சர் இருப்பார் என்பதால் அந்த மசோதாவை நிறுத்தி வைத்திருப்பதாகவும் ஆளுநர் கூறியிருக்கிறார்.

அத்துடன் ஆளுநர் மாளிகையில் நிதி செலவினங்களில் விதிமீறல் எதுவும் நடக்கவில்லை எனவும், முதலமைச்சர் மீது தனிப்பட்ட முறையில் தான் நல்ல மரியாதை வைத்திருப்பதாகவும் ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்து இருக்கிறார்.

Next Post

வெறும் வயிற்றில் இந்த பழங்களை மட்டும் சாப்பிடாதீங்க..!! உடலில் ஏற்படும் மாற்றங்கள்..!! கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

Thu May 4 , 2023
பழங்களை நாள்தோறும் எடுத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் நல்லது என்றாலும் சில பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நாம் உண்ணும் உணவில் பழங்கள், காய்கறிகள் என பலவகை உணவு பொருட்களும் இடம் பெறுகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளன. குறிப்பாக பழங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. அதனால், நம் முன்னோர்களும் பழங்களை நாம் உண்ணும் உணவுப்பட்டியலில் தவறாமல் இடம் பிடிக்க செய்ய […]
Culinary fruits front view

You May Like