அதிர்ச்சி சம்பவம்…..! சென்னை மைசூர் வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல்….!

நாட்டில் மத்திய அரசாங்கத்தால் வந்தே பாரத் ரயில் சேவைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ரயில் சேவைகளுக்கு பயணிகள் இடையே நல்ல வரவேற்பு காணப்படுகிறது இந்த நிலையில் அடிக்கடி வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் சம்பவங்களும் நடந்து வருகிறது.


அந்த வகையில், இதுவரையில் வந்தே பாரத் ரயில் மீது ஆறு முறைக்கு மேல் கல்வி தாக்குதல் நடைபெற்று உள்ளது. இதே போன்ற ஒரு சம்பவம் நேற்றைய தினமும் அரங்கேறி உள்ளது. அதாவது சென்னை மைசூர் வந்தே பாரத் ரயில் நேற்று மைசூரில் இருந்து கிளம்பி சென்னையை நோக்கி பயணமாக்கிக் கொண்டிருந்தது.

இந்த ரயில் மகேந்திரவாடி, அன்மதிர்கான் பேட்டை ரயில் நிலையத்துக்கு இடையே வந்து கொண்டிருந்த சமயத்தில் மாலை 6 மணி அளவில் மர்ம நபர்கள் சிலர் அந்த ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.

இதில் c6 பெட்டியில் 75 மற்றும் 76 உள்ளிட்ட இறக்கைகளுக்கு இடையில் அமைந்திருக்கின்ற கண்ணாடி சேதமடைந்திருக்கிறது. அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு எந்தவித காயமும் உண்டாகவில்லை. இது தொடர்பாக ஓட்டுனருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர் ரயில்வே போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதோடு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்ற நிலையில், இந்த சம்பவம் பயணிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Next Post

அதிமுகவின் மூத்த தலைவர் திடீர் மரணம்…..! சோகத்தில் எடப்பாடி பழனிச்சாமி…..!

Sun May 7 , 2023
அதிமுகவின் தலைமை கழக பேச்சாளர் டி ராஜேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக, இன்று காலமானார். எம்ஜிஆர் கட்சி தொடங்கியதில் இருந்து அதிமுகவில் உறுப்பினராக இருப்பவர் என்று கூறப்படுகிறது. மேலும் அவர் ஜெயலலிதா மீது மிகுந்த பாசமும் பற்றும் கொண்டவர் என்றும் சொல்லப்படுகிறது. அத்துடன் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக இருந்த அவர், பல்வேறு முக்கிய பொறுப்புகளை அதிமுகவில் வகித்திருக்கிறார். இத்தகைய நிலையில், உடல்நல குறைவால் என்று அவர் உயிரிழந்துவிட்ட சூழ்நிலையில், அவருடைய […]
eps admk

You May Like