காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவர் பி பி ஜி சங்கர்(42) இவர் பாஜகவின் எஸ்சி எஸ்டி பிரிவு மாநில பொருளாளராக இருந்து வந்தார். இவர் மீது பதினைந்துக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில், இருந்ததாக சொல்லப்படுகிறது.
இத்தகைய நிலையில், சென்ற ஏப்ரல் 27ஆம் தேதி தலைநகர் சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்டு இரவு காரில் தனியாக வீட்டுக்கு பயணித்துக் கொண்டிருந்தார் பி பி ஜி சங்கர். அவருடைய கார் பூவிருந்தவல்லி நசரத்பேட்டை சிக்னல் அருகே சென்று கொண்டிருந்தபோது அவரை திடீரென்று இரண்டு காரில் வந்த கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது.
இந்த கொலை குறித்து இதுவரையில் 11 பேர் கைது செய்யப்பட்டு 9 பேரை காவல்துறையினர் காதலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். இந்த நிலையில், இந்த கொலை குறித்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த காட்சிகளில் பிபிஜி சங்கர் காரை வழிமறித்த அந்த கும்பல் வெடிகுண்டை வீசியிருக்கின்றன. அவர்களிடமிருந்து தப்பித்து ஓடிய ஷங்கர் தன்னுடைய காரில் இருந்த கத்தியை எடுத்துக் கொண்டு ஓடியுள்ளார். அதோடு அவரை அந்த கும்பலும் துரத்தி சென்றது.
ஆனாலும் அவர் கத்தியை வைத்திருந்ததால் தன்னை கொலை செய்ய வந்தவர்களை திருப்பி தாக்க முயற்சி செய்தார். இதனால் அவரை வெட்ட முடியாமல் அந்த கும்பல் சுத்து போட்டு இருக்கிறார்கள். அப்போது அந்த கொலை கும்பல் போட்டி வந்த கார் அவரை பின்புறமாக இடித்து தள்ளி இருக்கிறது. இதில் சரிந்து கீழே விழுந்த அவரை, அந்த கும்பல் சாரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு கட்சி கொடியுடன் வந்த ஒரு காரில் தப்பி சென்றுள்ளது.
அந்த இரு கார்களும் சங்கரின் சடலத்தின் மீது ஏறி இறங்கிய காட்சிகளும் கேமரா காட்சிகளில் இடம் பெற்றிருந்தன. இந்த கொலை சம்பவம் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு பொதுமக்கள் முன்னிலையில் நடந்தேறி உள்ளது.