தமிழகத்தில் பள்ளி படிக்கும் காலத்தில் மாணவர்களின் திறனை அறிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு பயிற்சி வழங்கி தேர்ந்தெடுத்த துறையில் சிறந்து விளங்குவதற்காக நான் முதல்வன் என்ற திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த திட்டம் கடந்த மார்ச் மாதம் 7ம் தேதி அமைச்சர உதயநிதி ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிலையில், நான் முதல்வன் போட்டி தேர்வுகள் மத்திய அரசின் போட்டி தேர்வுகளை எளிதான முறையில் அணுகுவதற்கான ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்காக தற்போது இலவச பயிற்சிகள் கொடுக்கப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தில் பயிற்சி பெறுவதற்கு மாவட்டத்திற்கு 150 மாணவர்கள் வீதம் நேரடி வகுப்புகள் மூலமாக சிறந்த வல்லுனர்களை கொண்டு பயிற்சி வழங்கப்படும். இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெற மாணவர்கள் வரும் இருபதாம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் இதனை தொடர்ந்து, மே மாதம் 25ஆம் தேதி பயிற்சி வகுப்புகள் ஆரம்பமாகிறது. அதோடு இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெற விருப்பம் கொண்ட மாணவர்கள் http://candidate.tnskill.tn.gov.in/CENM/TNSDC_REGISTRATION.ASPX என்ற இணையதளத்தில் பயன்பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.