கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் பதவிக்கு போட்டி நிலவில் அந்த சூழ்நிலையில் கட்சி தலைமையின் நீண்ட ஆலோசனைக்கு பிறகு கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையாவும் துணை முதலமைச்சர் ஆக டி கே சிவகுமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பெங்களூரில் கண்டிரவா மைதானத்தில் இன்று பிற்பகல் பதவியேற்பு விழா நடந்தது இதில் 2வது முறையாக கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர் கிளாத் அவருக்கு பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் உள்ளிட்டவற்றை செய்து வைத்தார்.
அதோடு கர்நாடகத்தின் துணை முதலமைச்சர் ஆக டி கே சிவக்குமாரும் அவரை தொடர்ந்து எட்டு அமைச்சர்களும் பதவி ஏற்று கொண்டனர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வின் மகன் பிரியங்க் கார்கே ஜி பரமேஸ்வரா கே ஹெச் முனியப்பா கே ஜே ஜார்ஜ் எம்.பி பாட்டின் சதீஷ் ஜெர்க்கி ஹோலி ராமலிங்க ரெட்டி சமீர் அகமது கான் உள்ளிட்டோர் அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்வே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா, ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி ராஜா, கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் உள்ளிட்டோர் பங்கேற்று கொண்டனர்.