10-ம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு…! தமிழக அரசு அசத்தலான அறிவிப்பு…! உடனே பதிவு பண்ணுங்க…!

தமிழகத்தில்‌ வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சித்துறையின்‌ கீழ்‌ 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள்‌ மற்றும்‌ 330 தனியார்‌ தொழிற்பயிற்சி நிலையங்கள்‌ இயங்கி வருகின்றன. இவற்றில்‌ தற்போது 2023-2024-ம்‌ கல்வியாண்டிற்கான பயிற்சியாளர்‌ சேர்க்கை பதிவு துவங்க உள்ளது.


தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ பயிற்சி பெற 8-ம்‌ வகுப்பு அல்லது 10-ம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள்‌ விண்ணப்பிக்கலாம்‌. தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ சேர்ந்து பயிற்சி பெறுவதற்கான விண்ணப்பங்களை www.skillstraining.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ இன்று முதல்‌ 07.06.2023 வரை பதிவு செய்து கொள்ளலாம்‌.

இணையதளத்தில்‌ பதிவு செய்ய வசதி இல்லாத மாணவர்கள்‌, தமிழகம்‌ முழுவதும்‌ ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 147 உதவி மையங்கள்‌ மூலமாக சேர்க்கை பதிவை மேற்கொள்ளலாம்‌. இம்மையங்களின்‌ பட்டியல்‌ மேற்குறித்த இணையதள முகவரியில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும்‌, தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைகான விண்ணப்பித்தை பூர்த்தி செய்வதில்‌ ஏதேனும்‌ ஐயம்‌ ஏற்பட்டால் கீழ்காணும்‌ மின்னஞ்சல்‌ முகவரியிலும்‌ அலைபேசி எண்ணிலும்‌ தொடர்பு கொள்ளலாம்‌.

IMG 20230524 072633

Vignesh

Next Post

ஆன்லைன் விளையாட்டுகளுக்கும் வரி இருக்கு..!! எவ்வளவு தெரியுமா..? மத்திய அரசு அதிரடி..!!

Wed May 24 , 2023
தற்போதைய நிலையில் ஆன்லைன் விளையாட்டுக்களை பலர் விளையாடி வருகின்றனர். ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களால் தமிழ்நாட்டில் தற்கொலை சம்பவங்களும் அதிகரித்தும் வருகின்றன. இதனால்தான் இந்த ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய மாநில அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதேவேளையில் இந்த ஆன்லைன் விளையாட்டுகளுக்கும் வரி உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா? ரம்மி போன்ற பல்வேறு ஆன்லைன் விளையாட்டுக்கள் மூலம் மக்கள் பணம் ஈட்டுவதை அதிகம் விரும்புகின்றனர். இந்நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் […]
Online game

You May Like