குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று நடைபெற உள்ள ஐபிஎல் இறுதிப் போட்டியில் வலுவாக இருக்கும் குஜராத் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சந்திக்கிறது. தோனி தலைமையிலான சென்னை அணியின் பலம் மற்றும் பலவீனம் என்ன என்பதை தற்போது இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
தோனியின் கேப்டன்ஷிப்பை பொருத்தவரையில் சென்னை அணிக்கு முக்கிய பலமாக கருதப்படுகிறது. நெருக்கடியான பல போட்டிகளில் தோனி மிகவும் நேர்த்தியுடனும், சாமர்த்தியத்துடனும் வழி நடத்தி அணியை வெற்றி பெற செய்திருக்கிறார். இந்த போட்டியிலும் அவருடைய வியூகம் வெற்றியை வழங்கும் என்ற எதிர்பார்ப்பின் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
இந்த தொடர் முழுவதுமே சென்னை அணிக்கு டெவான் கான்வே,ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட இருவரும் மிக சிறப்பான தொடக்கத்தை கொடுத்திருக்கிறார்கள் கான்வே 6️ அரை சதங்களும், ருதுராஜ் 4 அரை சதங்களும் அடித்துள்ளனர்.
அதேபோல ரஹானே, சிவம் டுபே இவ்விரு ஆட்டக்காரர்களும் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள் குறிப்பாக அதிரடியாக சிக்சர்களை விளாசி ரன்குவிப்பை அதிகப்படுத்துவதில் இருவரும் திறமை வாய்ந்தவர்களே.
ரவீந்திர ஜடேஜாவை பொறுத்தவரையில் பேட்டிங் மற்றும் பௌலிங் உள்ளிட்ட இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் 175 ரன்கள் அவர் சேர்ந்துள்ளார்.
சென்னை அணியின் மேகப்பந்துவீச்சு பெரும்பாலான போட்டிகளில் வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறது. தீபக்சாகர், துஷார் தேஷ்பாண்டே, மதிஷா பத்திரானா உள்ளிட்டோர் அணியின் வெற்றிக்கு உதவிகரமாக இருந்துள்ளனர்.
இது ஒரு புறம் இருக்க, அம்பதி ராயுடு, மொயின்அலி உள்ளிட்ட வீரர்கள் நடு வரிசையில் ரன் குவிக்க தவறுவதால், பெரிய அளவிலான ரன்களை அந்த அணி எடுப்பதில் சிரமத்தில் இருக்கிறது.
துஷார் தேஷ்பாண்டே விக்கட்டுகளை கைப்பற்றினாலும் கூட ரன்களை எதிரணிக்கு வாரி வழங்கி விடுகிறார். 15 போட்டிகளில் விளையாடி இருக்கின்ற அவர், 317 ரன்களை எதிரணிக்கு வழங்கியிருக்கிறார் சராசரி 24.19 ரன்கள்.
வைடு, நோ பால் என்று சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் அதிகமான எக்ஸ்ட்ரா ரன்களை வழங்கி உள்ளனர். இதற்காக சென்னை அணி விமர்சிக்கப்பட்டிருந்தது இந்த விடயத்தில் சென்னை அணி இன்று கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.