ஐபிஎல் 2023 இறுதிப்போட்டியுடன், தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அம்பத்தி ராயுடு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மே 28ம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியானது கன மழைக்காரணமாக இன்று நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. முன்னதாக, தனது ஓய்வு குறித்த பதிவு அம்பத்தி ராயுடு பதிவிட்டுள்ளார். அதில் ஐபிஎல் தொடரில் இருந்து ஒய்வு பெற உள்ளதாக அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். அவர், குஜராத் மற்றும் சென்னை அணிகள் இரண்டுமே மிகச் சிறந்த அணிகள். இது ஒரு நல்ல பயணம். இன்று இரவு நடக்கும் இறுதிப் போட்டி ஐபிஎல்லில் எனது கடைசி ஆட்டமாக இருக்கும் என்று நான் முடிவு செய்துள்ளேன். நான் உண்மையிலேயே இந்த சிறந்த போட்டியை விளையாடி மகிழ்ந்தேன். என்று தெரிவித்துள்ளார்.