அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நிலவரம் என்ன தெரியுமா?

முதலமைச்சரின் உலக தரத்திலான திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.


தஞ்சை மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை சார்பில், டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர் அன்பில் மகேஸ் சிறப்பாக பணியாற்றிய 150 ஆசிரியர்களுக்கு ஒளிரும் ஆசிரியர் விருது மற்றும் 100% தேர்ச்சி பெற செய்த 1700 ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களும், சிறந்த பள்ளிகளுக்கான விருதுகளையும் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அரசு பள்ளியில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் இன்று சுமார் 1700 க்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் மே மாதத்தில் மட்டும் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை என்பது சுமார் 80 ஆயிரமாக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் அரசு பள்ளிகளில் சுமார் 11 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவால் உலக தரத்தில் பள்ளிகளுக்கு அரசு கொண்டுவரும் திட்டங்கள் மூலமாக மாணவர்கள் சேர்க்கை என்பது ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தாண்டு மாணவர்களுக்கு பள்ளி திறந்த முதல் நாளே புத்தகங்கள் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் பள்ளிக் கல்வித் துறையில் கலைஞரின் பங்கு எந்த அளவிற்கு உள்ளது என அதன் சிறப்புகளை எடுத்துரைக்கும் விதமாக கலைஞரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவித்தார்.

RUPA

Next Post

635,000 பேரின் பான் கார்டு தரவுகளை பயன்படுத்தி ரூ. 10,000 கோடிக்கு மேல் மோசடி!! பகீர் சம்பவம்!

Fri Jun 2 , 2023
கடந்த 5 ஆண்டுகளாக 6,35,000 பேரின் பான் அட்டைகளை முறைகேடாகப் பயன்படுத்தி அதன் மூலம் 2,660 போலி நிறுவனங்களை உருவாக்கி, பல கோடி மதிப்பிலான ஜிஎஸ்டி வரியை ஏமாற்றி வந்த 8 பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த பகீர் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. மொத்த வரி ஏய்ப்பு தொகையை இன்னும் கண்டறியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இது ரூ. 10,000 கோடிக்கு மேல் இருக்கும் […]

You May Like