மும்பை லிவ் இன் ரிலேஷன்ஷிப் கொலை வழக்கு…..! நடந்தது இது தான் உண்மையை உடைத்த காவல்துறை…..!

மும்பை மீரா ரோடு பகுதியில் இருக்கின்ற அடுக்குமாடி குடியிருப்பின் 7வது மாடியில் அமைந்திருக்கின்ற வீட்டில் மனோஜ் சாகனி 56 என்றவரும் சரஸ்வதிவைத்யா (32) என்ற பெண்ணும் கடந்த மூன்று வருடங்களாக லிவ் இன் பார்ட்னர்களாக வாழ்ந்து வந்தனர்.


இத்தகைய நிலையில் தான் இவர்களின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியிருக்கிறது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த வீட்டில் இருந்து அழகிய நிலையில் துண்டு, துண்டுகளாக கட்டப்பட்ட சரஸ்வதி வைத்யாவின் சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.

முதல் கட்ட விசாரணையில் அந்த பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது தெரியவந்திருக்கிறது. மும்பை காவல்துறை துணை காவல் ஆணையர் ஜெயந்த் பஜ்பலே தெரிவித்ததாவது அந்த பெண்ணின் உடல் மர அறுவை இயந்திரம் மூலமாக இரண்டாக துண்டிக்கப்பட்டு, பின்னர் உடல் பாகங்கள் சிறிது சிறிதாக வெட்டப்பட்டு அவை குக்கரில் வேகவைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து மனோஜ் சாகனி கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரை காவல்துறை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து வருகின்ற 16ஆம் தேதி வரையில் விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

இதற்கு நடுவே அந்த பெண்ணின் உடல் பாகங்கள் குக்கரில் வேகவைக்கப்பட்டு நாய்களுக்கு போடப்பட்டதாக ஒரு தகவல் வெளியானது. இந்த விவகாரம் குறித்து அந்த காவல்துறை அதிகாரி தெரிவித்ததாவது பெண்ணின் உடல் பாகங்கள் குக்கரில் வேகவைக்கப்பட்டது உண்மைதான். ஆனால் நாய்களுக்கு போடப்படவில்லை. குக்கரில் வேகவைக்கப்பட்ட உடல் பாகங்களை பிளாஸ்டிக் பைகளில் வைத்து குற்றவாளி அப்புறப்படுத்தி இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். பெண்ணின் உடல் பாகங்கள் ஜே ஜே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக ஜெயந்த் தெரிவித்திருக்கிறார்.

குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக எங்களுக்கு தகவல் வந்தது அதன் பேரில் காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சமையல் அறையில் ஏராளமான பாத்திரங்கள் மற்றும் வாலிகளில் சடலத்தின் துண்டுகள் கிடந்தது. இந்த சம்பவம் நடைபெற்று 3 அல்லது 4 நாட்கள் ஆகி இருக்கலாம் அதன் பிறகு தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இது குறித்து சம்பந்தப்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. என்று காவல்துறையினர் தெரிவித்து இருக்கின்றனர். மேலும் லிவ் இன் பார்ட்னர்களாக வாழ்ந்து வந்த இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனை தான் இந்த கொலைக்கு காரணம் என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

காஞ்சிபுரம் அருகே கணவன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி…..! ஆத்திரம் தீராததால் என்ன செய்தார் தெரியுமா…..?

Sat Jun 10 , 2023
காஞ்சிபுரம் மாவட்டம் பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்தவர் சந்தானம் இவர் மேஸ்திரி ஆக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனியாக வசித்து வருகிறார் இந்த நிலையில், அதே பகுதியில் கணவன் உயிரிழந்த நிலையில் 6 வயது குழந்தையுடன் இருந்த வேண்டா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து வந்தார் சந்தானம். அந்த பெண் தற்போது 6 மாத கர்ப்பிணியாக […]
murder pti 1549362654 0 1 1563085539

You May Like