இத்தாலியின் முன்னாள் பிரதமர் 86 வயதில் காலமானார்.
சில்வியோ பெர்லுஸ்கோனி, முன்னாள் இத்தாலிய பிரதமர் தனது 86வது வயதில் காலமானார் என்று அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஊடகத்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய பெர்லுஸ்கோனி, கடந்த சில காலமாக ரத்தப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார்.
அவர் 1994 மற்றும் 2011 க்கு இடையில் மூன்று இத்தாலிய அரசாங்கங்களை வழிநடத்தினார். அவரது கட்சி – Forza Italia – பிரதம மந்திரி ஜியோர்ஜியா மெலோனியின் வலதுசாரி கூட்டணியின் ஒரு பகுதியாகும். பெர்லுஸ்கோனி மிலனில் உள்ள சான் ரஃபேல் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.
அங்கு அவர் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு நாள்பட்ட மைலோமோனோசைடிக் லுகேமியாவுடன் தொடர்புடைய நுரையீரல் தொற்றுக்கு கிட்டத்தட்ட ஆறு வாரங்கள் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர்.