fbpx

மேல்படிப்புக்காக இங்கிலாந்து சென்ற ஆந்திர மாணவி கத்தியால் குத்தியதில் நடந்த சோகம்…!!

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த கோந்தம் தேஜஷ்வினி ரெட்டி என்ற மாணவி, மேல்படிப்புக்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளார். அங்குள்ள நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் அவர் படித்து வந்த நிலையில், பிரேசிலைச் சேர்ந்த 24 வயதான இளைஞர் நேற்று காலை கத்தியால் குத்தியதில் மாணவி தேஜஷ்வினி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. வெம்பிலேயில் தேஜஷ்வினி இருந்த அறையில் அவருடன் தங்கியிருந்த மற்றொரு மாணவியான அகிலா கத்திக் குத்து காயத்துடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்ட 23 வயது பெண் விடுவிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த தேஜஸ்வினி கடந்த 6 மாதங்களுக்கு முன்னர்தான், உடல்நிலை சரியில்லாத தனது தந்தையை பார்க்க ஹைதராபாத் இங்கிலாந்திலிருந்து வந்து சென்றுள்ளார். விரைவில் படிப்பை முடித்துவிட்டு தேஜஸ்வினி திரும்பிவந்ததும், அவருக்கு திருமணம் செய்துவைக்க, அவரது பெற்றோர் எண்ணியிருந்த நிலையில், இந்த சோக செய்திதான் அவர்களை வந்தடைந்துள்ளது. மாணவியை கத்தியால் குத்தியதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Maha

Next Post

மணிப்பூரில் இருதரப்பினரிடையே நடந்த பயங்க மோதலில் 9 பேர் பலி..!

Thu Jun 15 , 2023
கடந்த ஏப்ரல் மாதம் வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள காமன்லோக் என்ற இடத்தில் நேற்று நள்ளிரவும் இருதரப்புக்கு இடையே மோதல் நடைபெற்றதாகக் தகவல் வெளியாகி உள்ளது. இதில், வீடுகளில் இருந்த பலர் உயிரிழந்திருப்பதாகவும் காயமடைந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. தப்பிக்கும் நோக்கில் வீட்டைவிட்டு வெளியே வந்தவர்கள் மீது ஆயுதக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த பலர் அரசு மற்றும் […]
attack

You May Like