ஆவடி அருகே தண்டவாளத்தில் தேங்கி நின்ற மழைநீர்…..! 1 ½ மணி நேரம் தாமதமாக புறப்பட்ட அதிவிரைவு ரயில்…..!

ஆவடி ரயில் நிலையத்தில் பெங்களூரில் இருந்து இன்று காலை 6️ மணி அளவில் புறப்பட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு 11 மணியளவில் சென்று சேர வேண்டிய 14 பெட்டிகளை கொண்ட சதாப்தி அதிவிரைவு ரயில் சுமார் 1000 பயணிகளுடன் ஆவடியில் நின்று கொண்டு இருந்தது.


இதற்கு நடுவே சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும், பேஷன் பிரிட்ஜ்க்கும் இடையே தண்டவாளத்தில் மழைநீர் தேங்கி நின்றதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அதனை சரி செய்ய காலதாமதம் ஏற்பட்ட காரணத்தால் தண்ணீரை வெளியேற்றிய பின்னர் தான் அனைத்து விரைவில் ரயில்களும் இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இதன் காரணமாக, இந்த ரயிலில் பயணம் செய்த பயணிகள் மிகவும் வேதனை அடைந்தனர் பேருந்து நிலையத்திற்கு வாகனம் மூலமாகவும் வீட்டிற்கு அனுப்ப ரயில்வே பயணச்சீட்டு பரிசோதனையாளர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்துக்கொண்டிருந்தனர். ஆவடியில் சதாப்தி விரைவு ரயில் நின்று கொண்டிருந்த போது ஆவடியில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்தை நோக்கி சென்றது வந்தே பாரத் ரயில்.

பின்னர் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டபோது, டிக்கெட் பரிசோதகர்கள் இருவரை விட்டு சென்றது. அதில் ஒரு பரிசோதகர் ஓடி சென்று ரயிலில் பயணம் செய்த நிலையில், மீண்டும் நிறுத்தப்பட்டு மற்றொரு பரிசோதகர் வந்தவுடன் புறப்பட்டு சென்றது.

Next Post

மோடி அமெரிக்கா போகும் விமானத்தில் இவ்ளோ ரகசியங்கள் மறஞ்சிருக்கா???

Mon Jun 19 , 2023
இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi), வரும் ஜூன் 20ம் தேதியில் இருந்து 24ம் தேதி வரை அமெரிக்காவில் (US) சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதற்காக ஏர் இந்தியா ஒன் (Air India One) விமானத்தில் அவர் பறக்கவுள்ளார். இந்த விமானம் பற்றிய சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி. எரிபொருள் நிரப்புவதற்காக நிறுத்தப்பட வேண்டிய தேவையே இல்லாமல், இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு பறக்கும் திறன் ஏர் இந்தியா ஒன் […]
5 ஆண்டுகளில் 36 நாடுகள்..!! பிரதமர் மோடியின் பயண செலவு எத்தனை கோடி தெரியுமா..?

You May Like