ஆவடி ரயில் நிலையத்தில் பெங்களூரில் இருந்து இன்று காலை 6️ மணி அளவில் புறப்பட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு 11 மணியளவில் சென்று சேர வேண்டிய 14 பெட்டிகளை கொண்ட சதாப்தி அதிவிரைவு ரயில் சுமார் 1000 பயணிகளுடன் ஆவடியில் நின்று கொண்டு இருந்தது.
இதற்கு நடுவே சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும், பேஷன் பிரிட்ஜ்க்கும் இடையே தண்டவாளத்தில் மழைநீர் தேங்கி நின்றதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அதனை சரி செய்ய காலதாமதம் ஏற்பட்ட காரணத்தால் தண்ணீரை வெளியேற்றிய பின்னர் தான் அனைத்து விரைவில் ரயில்களும் இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இதன் காரணமாக, இந்த ரயிலில் பயணம் செய்த பயணிகள் மிகவும் வேதனை அடைந்தனர் பேருந்து நிலையத்திற்கு வாகனம் மூலமாகவும் வீட்டிற்கு அனுப்ப ரயில்வே பயணச்சீட்டு பரிசோதனையாளர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்துக்கொண்டிருந்தனர். ஆவடியில் சதாப்தி விரைவு ரயில் நின்று கொண்டிருந்த போது ஆவடியில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்தை நோக்கி சென்றது வந்தே பாரத் ரயில்.
பின்னர் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டபோது, டிக்கெட் பரிசோதகர்கள் இருவரை விட்டு சென்றது. அதில் ஒரு பரிசோதகர் ஓடி சென்று ரயிலில் பயணம் செய்த நிலையில், மீண்டும் நிறுத்தப்பட்டு மற்றொரு பரிசோதகர் வந்தவுடன் புறப்பட்டு சென்றது.