வேட்புமனுவில் சொத்து மதிப்பை மறைத்த விவகாரம்…..! ஓ.பி.ஆருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம் இனி என்ன நடக்கும்…..?

சென்ற 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் தேனி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்ட ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். இந்த நிலையில் அவருடைய வேட்பு மனதில் சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மறைத்து இருப்பதால் அவர் வெற்றி பெற்றதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்து தேனி தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.


இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

அதோடு, இந்த வழக்கை மறுபடியும் விசாரித்தால் மட்டுமே ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும் என்று ரவீந்திரநாத் தரப்பு வைத்த கோரிக்கையை ஏற்று ஒப்புதல் வழங்கியும் இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

Next Post

தமிழக மக்களே அடுத்த 2️ நாட்களுக்கு குடையை மறக்காதீர்கள்…..! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அலர்ட்….!

Sat Jun 24 , 2023
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்ற நிலையில், இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழக சென்னையை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மழையும், மன்னார் வளைகுடா, தென்தமிழகம், குமரி கடல் மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் […]

You May Like