சென்ற 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் தேனி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்ட ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். இந்த நிலையில் அவருடைய வேட்பு மனதில் சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மறைத்து இருப்பதால் அவர் வெற்றி பெற்றதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்து தேனி தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
அதோடு, இந்த வழக்கை மறுபடியும் விசாரித்தால் மட்டுமே ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும் என்று ரவீந்திரநாத் தரப்பு வைத்த கோரிக்கையை ஏற்று ஒப்புதல் வழங்கியும் இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.