அருப்புக்கோட்டை அருகே உள்ள கொப்புசித்தம்பட்டியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவருடைய மனைவி விஜயலட்சுமி தற்போது ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். இவர்கள் பந்தல்குடியின் வசித்து வருகின்றனர் வீட்டை ஜெய்சங்கரின் சகோதரி பஞ்சவர்ணம் பராமரித்து வருவதாக கூறப்படுகிறது.
கொப்புசித்தம்பட்டியில் தாமரைச்செல்வன் என்பவரின் மனைவி பூரண அபி என்பவர் உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். இதனால் தாமரைச்செல்வனுக்கும், ஜெய்சங்கருக்கும் முன்பாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இத்தகைய என் நிலையில் தான் கொப்புசித்தம்பட்டியில் இருக்கின்ற ஜெய்சங்கரின் வீட்டில் நேற்று முன்தினம் இரவு இரண்டு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது. இதனால் வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகள் எரிந்து சேதம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக வழங்கப்பட்ட புகாரின் அடிப்படையில், பந்தல்குடி காவல்துறையினர் தாமரைச்செல்வன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.