தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் நல்லூர் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் நாகர்கோவில் பகுதியில் இருக்கிற தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றில் தங்கி படித்து வந்தார். இவரது உறவுக்கார வாலிபர் சிவகுமார் (25) அவர் தன்னுடைய சகோதரியை குமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில், சிவகுமார் தன்னுடைய சகோதரி வீட்டில் தங்கி அதே பகுதியில் இருக்கின்ற ஒரு படகு கட்டும் தளத்தில் பணியாற்றி வந்ததாக தெரிகிறது. இத்தகைய நிலையில், சிவகுமாருக்கும், அந்த இளம் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தன்னுடைய சகோதரியின் மகளுக்கி பிறந்தநாள் எனவும், கேக் வெட்டி கொண்டாடப் போவதால் நீயும் வரவேண்டும் எனவும் அந்த மாணவியை சிவக்குமார் அழைத்திருக்கிறார். இதனை நம்பிய அந்த மாணவி அவர் அழைத்த இடத்திற்கு வந்தார். அப்போது குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இருக்கிறார் சிவகுமார். இதை குடித்த சற்று நேரத்தில் மாணவி மயக்க நிலைக்கு சென்றார்.
அதன் பிறகு அந்த மாணவியை சிவக்குமார் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். சற்று நேரத்தில் கண்விழித்துப் பார்த்த அந்த மாணவி தனக்கு நேர்ந்த அவலத்தை உணர்ந்து கொண்டதால் கதறி, அழுது சிவகுமாரிடம் சண்டை போட்டுள்ளார். அப்போது உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சிவக்குமார் சமாதானம் செய்திருக்கிறார்.
ஆனால் இந்த சம்பவத்தை அறிந்து கொண்ட சிவகுமாரின் பெற்றோர் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து மாணவியை தரக்குறைவாக பேசியிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆகவே குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிவகுமார் மற்றும் அவரது தந்தை மீது மாணவி புகார் வழங்கினார் இந்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.