செம வாய்ப்பு…! 35 வயது பூர்த்தியான நபர்களுக்கு 25% மானியம்‌…! எப்படி பெறுவது…? முழு விவரம் இதோ…

வியாபாரம்‌ சார்ந்த தொழில்கள்‌ துவங்குவதற்கு தமிழக அரசின் மானியம் திருப்பெருவதற்கு விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழக அரசின்‌ படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ UYEGP திட்டத்தின்‌ கீழ்‌ வியாபாரம்‌ சார்ந்த தொழில்கள்‌ துவங்குவதற்கு திட்ட மதிப்பீட்டு தொகையும்‌ மானிய தொகையும்‌ உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை இத்திட்டத்தில்‌ அதிகபட்சமாக ரூ.5 இலட்சம்‌ வரை வங்கியில்‌ கடன்பெற்று அதற்கு 25 சதவீத மானியம்‌ அதிகபட்சமாக ரூ.1.25 இலட்சத்தை பெறலாம்‌ என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது புதிய அரசாணை படி அதிகபட்சமாக ரூ.15 இலட்சம்‌ வரை வங்கியில்‌ கடன்பெற்று அதற்கு 25 சதவீத மானியம்‌ அதிகபட்சமாக ரூ.3.75 இலட்சம்‌ வரை பெறலாம்‌.


ஏற்கனவே உள்ள UYEGP மற்றும்‌ NEED திட்டத்தில்‌ பொதுப்பிரிவு ஆண்களுக்கு சுய தொழில்‌ செய்வதற்கு அதிகபட்சமாக 35 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்‌. எஸ்‌.சி., எஸ்‌.டி., எம்‌.பி.சி., பி.சி, சிறுபான்மையினர்‌, பெண்கள்‌, முன்னாள்‌ ராணுவ வீரர்‌ ஆகியோர்‌ 45 வயது வரை கடன்‌ பெறலாம்‌ என அறிவிக்கப்பட்டிருந்தது. புதிய அரசாணை படி UYEGP மற்றும்‌ NEED திட்டத்தில்‌ பொதுப்பிரிவு ஆண்களுக்கு 45 வயது வரையிலும்‌, எஸ்‌.சி., எஸ்‌.டி, எம்‌.பி.சி., பி.சி., சிறுபான்மையினர்‌, பெண்கள்‌, முன்னாள்‌ ராணுவ வீரர்‌ ஆகியோர்க்கு 55 வயது வரையிலும்‌ வங்கியில்‌ விண்ணப்பிக்க தகுதி என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

கிரிக்கெட் உலகின் "தாதா" சௌரவ் கங்குலி பிறந்த தினம் இன்று...

Sat Jul 8 , 2023
ஜூலை 8 அன்று, இந்தியாவின் மிகச்சிறந்த மற்றும் செல்வாக்குமிக்க கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான சவுரவ் கங்குலியின் பிறந்தநாளைக் கொண்டாட கிரிக்கெட் உலகம் ஒன்று கூடுகிறது. “தாதா” என்று அன்புடன் அழைக்கப்படும் கங்குலி, அவரது பேட்டிங் திறமை, திறமையான கேப்டன்சி மற்றும் சர்வதேச அரங்கில் இந்திய கிரிக்கெட் அணியை ஒரு வலிமைமிக்க சக்தியாக மாற்றியதில் அவரது முக்கிய பங்கு ஆகியவற்றிற்காக புகழ்பெற்றவர். ஜூலை 8, 1972 இல், கொல்கத்தாவில் (முன்னர் கல்கத்தா […]
ganguly

You May Like