இந்திய-சீனா எல்லையில் உள்ள தொலைதூர கிராமப் பகுதிகளில் இலவச தூர்தர்ஷன் டிடிஎச் இணைப்புகளை வழங்குவதை மத்திய அரசு உறுதி செய்யும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார்.
தொலைதூர கிராமங்களில் வசிப்பவர்களுக்கு சிறந்த மொபைல் இணைப்பு வழங்குவது விரைவில் உறுதி செய்யப்படும் என்றும், இந்த பகுதிகளில் தொலைத்தொடர்பை உறுதி செய்ய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. லே பகுதியிலிருந்து 211 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லடாக்கின் கர்சோக் கிராம மக்களுடன் உரையாடிய போது இவ்வாறு கூறினார்.
உள்ளூர் கிராம மக்களுக்கு சிறந்த டிஜிட்டல் இணைப்பு, சாலை இணைப்பு, சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், விளையாட்டு உட்கட்டமைப்பை மேம்படுத்தப்படுத்துதல் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.