சென்னை திருவல்லிக்கேணி அப்பாவு தெருவை சேர்ந்தவர் ராசு இவர் தள்ளு வண்டியில் இஸ்திரி பெட்டியை வைத்து துணிகளை அயர்னிங் செய்து கொடுக்கும் வேலையை பார்த்து வருகிறார். இவர் கடந்த 6ஆம் தேதி இரவு தள்ளு வண்டியை திருவல்லிக்கேணி அப்பாவை தெருவில் சாலை ஓரமாக நிறுத்திவிட்டு அதற்கு அடுத்த நாள் காலை வந்து பார்த்தபோது தள்ளுவண்டியில் இருந்த இஸ்திரி பெட்டி மற்றும் பணம் உள்ளிட்டவை காணாமல் போயிருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக டி ஒன் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் அவர் புகார் வழங்கியதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.
திருவல்லிக்கேணி d1 காவல் நிலைய குற்ற குறைவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டும் சம்பவ இடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட அஜயன் மற்றும் ராமச்சந்திரன் உள்ளிட்ட இருவரை கைது செய்தனர் அவர்களிடமிருந்து 38 இஸ்திரி பெட்டிகள் 12000 நோக்கம் மற்றும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு இருசக்கர வாகனம் வந்துட்டவற்றை வரை முதல் செய்திருக்கிறார்கள் காவல்துறையினர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட அஜயன் மற்றும் அவருடைய நண்பரான ராமச்சந்திரன் என்பவர் உடன் சேர்ந்து திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், அபிராமபுரம், தேனாம்பேட்டை மற்றும் பட்டினப்பாக்கம் போன்ற இடங்களில் சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தள்ளு வண்டிகளில் இருக்கின்ற இஸ்திரி பெட்டிகளை திருடி இருப்பது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட 2 நபர்களும் விசாரணைக்கு பிறகு நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சிறையில் அடைக்கப்பட்டனர்.