fbpx

மதுரை அருகே அதிமுக கவுன்சிலர் சரமாரியாக வெட்டிப் படுகொலை…..!

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பேரூராட்சி 4வது வார்டு அதிமுக கவுன்சிலராக இருந்து வருபவர் சந்திர பாண்டியன். இவரை மதுரை பாலமேடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர் சிலரால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்.

சமீப காலமாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அதன் ஒரு விளைவாகவே இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது.

காவல்துறையினர் அதிமுக கவுன்சிலர் சந்திரபாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்ற நிலையில், குற்றவாளிகளை தேடும் பணியில் காவல்துறையினர் முடுக்கிவிடப்பட்டிருக்கிறார்கள்.நடு ரோட்டில் அதிமுக கவுன்சிலர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பாலமேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

1967 ஜூலை 18..!! உயிரை விட்ட தியாகி..!! இறங்கி வராத காமராஜர்..!! எகிறிய அண்ணா..!! ’தமிழ்நாடு’ என்ற பெயர் வந்தது இப்படித்தான்..!!

Mon Jul 17 , 2023
சென்னை மாகாணம், மதராஸ் மாகாணம், மெட்ராஸ் மாகாணம் என்ற பெயரை 1967ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி ’தமிழ்நாடு’ என பெயர் மாற்றம் செய்த நாள் தமிழ்நாடு நாள் என தமிழ்நாடு அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், இந்த பெயர் மாற்றம் எப்படி வந்தது, இதனால் எதிர்கொண்ட பிரச்சனைகள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்… ‘மெட்ராஸ் ஸ்டேட் என்பதெல்லாம் பிரிட்டிஷார் காலத்தோடு போகட்டும்… நமது மாநிலம் தமிழ்நாடு […]
1967 ஜூலை 18..!! உயிரை விட்ட தியாகி..!! இறங்கி வராத காமராஜர்..!! எகிறிய அண்ணா..!! ’தமிழ்நாடு’ என்ற பெயர் வந்தது இப்படித்தான்..!!

You May Like