ஆப்பிரிக்காவின் வெப்ப மண்டலப் பகுதிகளில், நமீபியாவின் வடகிழக்குப் பகுதியில் வாழும் ஓர் அபூர்வமான பழங்குடி மக்கள் ஹிம்பா (Himba). இந்த சமூகத்தினர் தங்களை “ஓவாஹிம்பா” என்றும் அழைக்கின்றனர். மனிதவள ஆய்வாளர்கள், மானுடவியலாளர்கள் ஆகியோர் உலகளவில் பெரிதும் ஆர்வமுடன் இவர்களது வாழ்க்கைமுறை, ஆடை, சுகாதாரக் கையாளும் விதி உள்ளிட்டவற்றை தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.
ஆப்பிரிக்காவின் வெப்ப மண்டல பகுதிகளில் ஹிம்பா பழங்குடியினர் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயம் செய்வதை மூலத் தொழிலாக வைத்துள்ளனர். ஆடு, மாடு, செம்மறி ஆடுகள் போன்ற கால்நடைகளை வளர்ப்பதிலும் மற்றும் கலைநயமிக்க பொருட்களை தயாரிப்பதிலும் ஹிம்பா பழங்குடியினருக்கு ஆர்வம் அதிகம் உண்டு.
அந்நியர்களிடமும், தங்களை காண வரும் சுற்றுலாவாசிகளிடமும் மரியாதையுடன் நடந்துகொள்கிறார்கள். தங்களுடைய கலாச்சார விழுமியங்களையும் மரபுகளையும் கண்டு அச்சுறுத்தல் அடைபவர்களையும் பரிவுடன் நடத்துக்கின்றனர். ஆனால் இந்த ஹிம்பா பழங்குடியின மக்கள் யாரும் தண்ணீரைக் கொண்டு குளிப்பது கிடையாது. கடுமையான பாலைவன காலநிலை மற்றும் குடிநீர் கிடைக்காத தீவிரமான சூழலில் வாழ்கின்றனர். அதனால் கிடைக்கும் தண்ணீரை அவர்கள் குடிப்பதற்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர்.
ஒரு குழி தோண்டி மூலிகைகளை எரித்து புகைக்க செய்கின்றனர். பிறகு புகைக்கு மேலே நின்றுகொண்டு போர்வையால் தங்களை மூடிக்கொள்கின்றனர். இதனால் புகை வெளியே வர முடியாது. பின்னர் அவர்களுடைய உடல் முழுவதும் நன்றாக வியர்க்கத் தொடங்கும். அதை வைத்து உடலையும் முகத்தையும் தலையையும் சுத்தம் செய்துகொள்கின்றனர். இணையம், தொழில்நுட்பம், நவீன வாழ்க்கை என எல்லாம் மாறிவரும் இன்றைய உலகில், ஹிம்பா மக்களின் இயற்கைநிலை சார்ந்த வாழ்க்கை விசித்திரமானதாக உள்ளது.
Read more: ரூ. 5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை.. ஆயுஷ்மான் கார்டை எப்படி பெறுவது..?