கொச்சி அருகே கண்டெய்னர்களுடன் சென்ற கப்பல் கடலில் மூழ்கிய விபத்தை கேரள அரசு பேரிடராக அறிவித்தது.
கேரள மாநிலத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சிக்குத் திரும்பிய லைபீரியாவைச் சேர்ந்த சரக்குக் கப்பல், அரபிக் கடலில் விபத்துக்குள்ளானது. கடலுக்கு 70 கி.மீ. தொலைவில், பலத்த காற்று காரணமாக கப்பல் கவிழ்ந்ததில், அதிலிருந்த 640 கன்டெய்னர்களும் கடலில் மூழ்கின. இதில் 13 ஆபத்தான சரக்குகள் உள்ளன என்பது அச்சத்தை அதிகரித்துள்ளது.
விபத்துக்குள்ளான வேளையில் கப்பலில் இருந்த 24 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். எனினும், கால்சியம் கார்பைடு, 84.44 மெட்ரிக் டன் டீசல், 367.1 மெட்ரிக் டன் எரிபொருள் எண்ணெய் ஆகியவை கடலில் கலந்ததால், எண்ணெய்க் கசிவு ஏராளமான கடல்நிலப்பரப்பில் பரவியுள்ளது. இதையடுத்து, கேரள அரசு விபத்தை பேரிடராக அறிவித்து, 20 கடல் மைல் சுற்றளவில் மீன்பிடி தடை விதிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள், பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கான பாதுகாப்பு முன்னுரிமை என அறிவித்துள்ள அரசு, கடற்கரை அடைவதற்கான எண்ணெய்க் கசிவுகளை கையாள மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளன என்றும் தெரிவித்துள்ளது.
Read more: காலையில் நேரமில்லையா..? மாலையில் நடைபயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன தெரியுமா..?