குட் நியூஸ்…! தனிமனைகளை இணையவழி மூலம் விண்ணப்பித்து வரன்முறைப்படுத்த அனுமதி…!

Tn Government registration 2025

அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் விற்கப்பட்ட தனிமனைகளை இணையவழி மூலம் விண்ணப்பித்து வரன்முறைப்படுத்த அனுமதி தமிழக அரசு அரசாணை வெளியீடு.


இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் அனுமதியற்ற மனைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு அதில் குறைந்தபட்சம் ஒரு மனையாவது விற்கப்பட்டு அதற்கான விற்பனைப்பத்திரம் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்டிருப்பின் அந்த மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனைகள் மற்றும் மனைப்பிரிவையும் வரன்முறைப்படுத்த அந்த விதிகள் வெளியிடப்பட்ட ஆறு மாதங்களுக்குள் கட்டாயமாக விண்ணப்பிக்க வேண்டும் என ஆணை வெளியிடப்பட்டது.

மேற்குறிப்பிட்ட காலவரையறையினை 30.06.2026 வரை நீட்டிக்கப்பட்டது. 2025-2026-ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவை மானியக்கோரிக்கையின் போது, மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது. அதன்படி 20.10.2016-க்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில், மேற்கண்ட தேதிக்கு முன் பதிவு செய்யப்பட்ட தனிமனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்படும்.

20.10.2016 அன்று அல்லது அதற்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் कुणी 10-600607tLima வாங்கிய பொதுமக்கள் வரன்முறைக்கு உரிய காலத்தில் விண்ணப்பிக்காமல் இருந்தாலும் அவர்கள் பயன்பெறும் வகையில், 20.10.2016-க்கு முன்பதிவு செய்யப்பட்ட விற்பனை ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு அம்மனையினை எவ்வித காலக்கெடுவுமின்றி இணைய வழி மூலம் விண்ணப்பித்து ஏற்கனவே உள்ள விதிகளில் எவ்வித மாற்றமும் இன்றி வரன்முறைப்படுத்த ஆணை வழங்குமாறு அரசினைக் கோரியுள்ளார்.

நகர் ஊரமைப்பு இயக்குநர் அவர்களின் மேற்காணும் கருத்துருவினை அரசு கவனமாக பரிசீலித்து, 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் தனிமனையினை வாங்கிய பொதுமக்கள் வரன்முறைக்கு உரிய காலத்தில் விண்ணப்பிக்காமல் இருந்தாலும் அவர்கள் பயன்பெறும் வகையில், 20.10.2016-க்கு முன் பதிவு செய்யப்பட்ட விற்பனை ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு அத்தனிமனையினை எவ்வித காலக்கெடுவுமின்றி இணைய வழிமூலம் விண்ணப்பம் பெற்று ஏற்கனவே உள்ள விதிகளில் மாற்றமில்லாமல் வரன்முறைப்படுத்திக் கொள்ளலாம் என அரசு இதன் மூலம் ஆணை வெளியிடுகிறது. தமிழ்நாடு அங்கீகரிக்கப்படாத மனைபிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் விதி 2017-க்கான உரிய திருத்தம் பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More: ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு இனி அகவிலைப்படி உயர்வு கிடையாது..!! விதிகளில் மாற்றம்..

Vignesh

Next Post

பள்ளி & கல்லூரி ID கார்டு இருந்தால் போதும்...! அரசு பேருந்தில் இலவச பயணம்..! அமைச்சர் அசத்தல் அறிவிப்பு...!

Sat May 31 , 2025
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால், 2024-25-ஆம் கல்வி ஆண்டுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பயண அட்டை அல்லது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அல்லது பள்ளிச் சீருடையுடன் மாணவ, மாணவிகள் தங்கள் இருப்பிடத்திலிருந்து தாம் பயிலும் பள்ளி வரையிலும் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, வரும் 02.06.2025 அன்று முதல் பள்ளிகள் […]
Tn Bus 2025

You May Like