ரூ.30 கோடி லாட்டரி தொகையை காதலிக்கு தூக்கி கொடுத்த இளைஞன்.. பாய் பிரண்டுடன் எஸ்கேப்..!!

Lawrence Campbell 1

காதலனின் 30 கோடி லாட்டரி தொகையை வாங்கிக்கொண்டு எஸ்கேப் ஆன காதலி மீது இளைஞன் வழக்கு தொடர்ந்துள்ளார்.


கனடாவின் வின்னிபெக்கைச் சேர்ந்த லாரன்ஸ் கேம்பல் என்ற நபர், தனது முன்னாள் காதலியான கிரிஸ்டல் மெக்கே மீது பரபரப்பான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், 2024-ல் வெற்றி பெற்ற ரூ.30 கோடி லாட்டரி டிக்கெட் தன்னுடையது என்றும், அந்த பணம் இப்போது தனது முன்னாள் காதலியான மெக்கேவிடம் இருப்பதாகவும், அதனை வாங்கித் தருமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

அவர்களின் காதல் உறவு நேர்மையானதும், நம்பிக்கையானதும் எனக் கருதிய லாரன்ஸ் கேம்பல், தனது காதலியான மெக்கேவின் பெயரில் லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார். லாட்டரியில் வெற்றி பெறவே அந்த பெண்ணும் லாட்டரியுடன் சென்று பரிசுத் தொகையைப் பெற்றுள்ளார். ஆனால் வெகு நாட்களிலேயே, மெக்கே திடீரென காணாமல் போனதாகவும், பின்னர் வேறொரு ஆணுடன் இருப்பது தெரியவந்ததாகவும் அவர் கூறுகிறார்.

நாங்கள் ஹோடலில் ரூம் எடுத்து தங்கியிருந்தோம். அவர் அங்கு வரவில்லை. எனது மெசேஜ், கால் என எதற்கும் பதிலில்லை. சமூக வலைத்தளங்களிலும் பிளாக் செய்துவிட்டார். என்னோடு இருந்த அனைத்து தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டார். கஷ்டப்பட்டு அவர் எங்கே இருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்தேன். அப்போது நான் உடைந்து போய்விட்டேன். இதன் காரணமாகவே நாங்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கில், வெற்றிப்பரிசை அவரது காதலி பெற்றதற்கு ஒத்துழைத்ததாகக் கூறி, மேற்கு கனடா லாட்டரி கார்ப்பரேஷன் (WCLC) மற்றும் மனிடோபா மதுபானம் மற்றும் லாட்டரி வாரியம் ஆகிய நிறுவனங்களுக்கும் எதிராக கேம்பல் வழக்குத் தொடர்ந்துள்ளார். காதலியின் செயலாள் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும் அந்த நபர் குறிப்பிட்டார்.

Read more: ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி.. முதல் பரிசு ரூ.10,000..!! – பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு




Next Post

கொரோனா தொற்று பாதித்த 28 பேர் உயிரிழப்பு.. தமிழ்நாட்டில் இத்தனை பேருக்கு பாதிப்பா..?

Sun Jun 1 , 2025
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,758 ஆக அதிகரித்துள்ளது. 2025 ஜனவரி முதல் கொரோனா பாதித்த 28 பேர் உயிரிழந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தெற்கு ஆசியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இந்த தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால், சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, முகக்கவசங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இன்றைய நிலவரப்படி […]
Corona 2025 2

You May Like