வெளியேயும் வெப்பம்; உள்ளேயும் வெப்பம்!. தாங்கமுடியல!. ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

house cool

கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் மக்கள் மதிய நேரங்களில் வெளியே செல்லவே அவதிப்படுகின்றனர். காலை வேளையில் 10 மணி நெருங்கும்போதே வெயிலால் அனத்தல், வியர்த்து ஒழுகுதல் என தொடங்கி விடுகிறது. வெளியே சென்றால்தான் தொல்லை என்று சிலர் வீடுகளிலேயே இருந்தாலும் கூட வெயிலினால் வீடே அனல் பறக்கிறது. மின்விசிறியை போட்டால் கூட அனல்காற்றுதான் வீசுகிறது என பலரும் புலம்புகின்றனர். ஏசி இல்லாத வீடுகளில் வெயிலின் தாக்கத்தை எப்படி குறைப்பது என பார்ப்போம்.


பொதுவாக வெயில் காலங்களில் கூரை வீடுகளை விட மாடி வீடுகள், ஓட்டு வீடுகள்தான் அதிகம் அனத்தி எடுக்கும். கூரை வீடுகளில் வேயப்படும் தென்னை ஓலைகள் வெப்பத்தை கிரகித்து குளிர்ச்சியை தரக்கூடியவை. அதனால் தென்னை மட்டை, பனை ஓலை போன்றவற்றை மொட்டை மாடிகளிலும், ஓடுகள் மீதும் போட்டு வைத்தால் வீட்டிற்குள் வெப்பம் இறங்காது.

அப்படி இல்லையென்றால் மாடி மீது தண்ணீரை ஊற்றிவிட்டு வெயிலின் தாக்கத்தை தணிக்கலாம். ஆனால் அடிக்கும் வெயிலுக்கு தண்ணீர் சீக்கிரமே ஆவியாகிவிடும். அதனால் மாடிகளில் சணல் சாக்குகளை போட்டு அதன்மேல் தண்ணீர் ஊற்றி விட்டால் வீடு குளுமையாக நீண்ட நேரத்திற்கு இருக்கும். இரவு நேரத்தில் அனல் வீசுவதால் தூங்க இயலாமல் பலர் சிரமப்படுவார்கள். அந்த சமயங்களில் ஈர துண்டை நனைத்து பிழிந்து, டேபிள் ஃபேனுக்கு பின்னால் தொங்கவிட்டால் காற்று குளுமையாக வீசும்.

வெள்ளை நிற சுண்ணாம்பை மாடித் தரையில் திக் காக அடிப்பதன் மூலம், வெண்மை நிறம் வெயிலை பிரதிபலிக்கச் செய்து அதன் சூட்டினை தரைக்கு இறங்காமல் செய்கிறது. இப்படி வெள்ளை அடிக்கப்பட்ட மாடித் தரையில் நீங்கள் 45 டிகிரி வெயில் அடித்தாலும் வெறும் காலில் நிற்கலாம், குளிர்ச்சியாகவே இருக்கும். இதற்கு செலவு குறைவானது முதல் அதிகம் செலவு வைப்பது வரை பல முறைகள் இருக்கிறது.

Readmore: சாதம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு சப்பாத்தி சாப்பிட்டால் எடை குறையுமா..? – மருத்துவர் விளக்கம்

KOKILA

Next Post

சிந்து நதி நீர் விவகாரம்!. இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயார்!. வெளியுறவு அமைச்சர் இஷாக் தார்!

Thu Jun 5 , 2025
சிந்து நதி நீர் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது, ஆனால் அதற்காக ஆசைப்படவில்லை என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் இஷாக் டார் கூறினார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இஷாக் டார், பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பின் சமீபத்திய துருக்கி, ஈரான், அஜர்பைஜான் மற்றும் தஜிகிஸ்தான் பயணத்தின் விவரங்களை ஊடகங்களுக்கு வழங்கவும், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுடனான மோதலில் அந்தந்த நாடுகளின் தலைமைகள் அளித்த ஆதரவிற்கு […]
Ishaq Dar

You May Like