ஆர்சிபி வெற்றி நிகழ்வில் 11 பேர் பலி!. அல்லு அர்ஜுனை போல் விராட் கோலியும் கைது செய்யப்படுவாரா?.

allu arjun virat kohli 11zon

18 ஆண்டுகளில் முதல்முறையாக பெங்களூரு அணியினர் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளனர். வெற்றி பெற்ற ஆர்சிபி அணி வீரர்களை வாழ்த்த பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை காண ஆயிரக்கணக்கில் கட்டுக்கடாங்காமல் ரசிகர்கள் கூடியதால், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 33 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். ஐபிஎல் தொடங்கி 18 சீசன்கள் முடிந்துவிட்டன. முதல் சீசனிலிருந்தே கோப்பைக்காக போராடி வந்த ஆர்சிபி அணியின் கனவு, 17 சீசன்களாக நிறைவேறாத நிலையில், 18வது சீசனில் ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றது.


நேற்றுமுன்தினம் இரவு நடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி அணி ரஜத் பட்டிதார் தலைமையில் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. முதல் சீசனிலிருந்து ஆர்சிபி அணியில் ஆடிவரும் விராட் கோலி, 17 சீசன்களாக கோப்பைக்காக போராடிய நிலையில், அவரது கனவு 18வது சீசனில் நிறைவேறியது. ஆர்சிபி அணியின் ஐபிஎல் வெற்றியை பெங்களூரு உட்பட கர்நாடக மாநிலம் முழுவதும் ரசிகர்கள் கோலாகலமாகக் கொண்டாடிவருகின்றனர்.

அந்தவகையில், ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணிக்கு நேற்று பெங்களூரு விதான சவுதா வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. ஐபிஎல் கோப்பையுடன் விமானத்தில் வந்த ஐபிஎல் வீரர்கள், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட ஆர்சிபி அணியினரை பெங்களூரு எச்.ஏ.எல் விமான நிலையத்தில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் வரவேற்றார். விராட் கோலிக்கு கன்னட கொடி மற்றும் ஆர்சிபி கொடியை கொடுத்து வரவேற்ற டி.கே.சிவகுமார், மற்ற வீரர்கள் மற்றும் தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட பயிற்சியாளர்களுக்கு பூங்கொடுத்து கொடுத்து வரவேற்றார்.

இதைத்தொடர்ந்து எச்.ஏ.எல் விமான நிலையத்திலிருந்து ஆர்சிபி வீரர்கள் தனியார் ஓட்டலுக்கு சென்றனர். அவர்கள் சென்ற வழிநெடுக, சாலையின் இருபுறங்கிலும் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரளாக நின்று, ஆர்சிபி மற்றும் விராட் கோலி என முழங்கினர். மேலும், விதான சவுதாவில் ஆர்சிபி அணிக்கு மாநில அரசு சார்பில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விதான சவுதா முன் திரண்டனர். விதான சவுதா மற்றும் கப்பன் பார்க்கைச் சுற்றியுள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஆர்சிபி வீரர்கள் ஓட்டலில் இருந்து விதான சவுதாவிற்கு வருவதற்கு முன்பாகவே விதான சவுதாவில் திரண்ட ரசிகர்கள், ஆர்சிபி கோஷத்தை எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். விதான சவுதாவிற்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. எனினும் ஆயிரக்கணக்கான இளைஞர்களும், பெண்களும் விதான சவுதாவுக்கு வெளியே திரண்டு நின்றனர். ஆர்சிபி ஜெர்சி அணிந்துகொண்டு, ஆர்சிபி கொடியை கையில் ஏந்திக்கொண்டு திரண்டிருந்த ரசிகர்களால் விதான சவுதாவே அதிர்ந்தது.

விதான சவுதாவில் நடந்த விழாவில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் கலந்துகொண்டு, ஆர்சிபி வீரர்களை கவுரவித்தனர். ஆர்சிபி வீரர்களுக்கு மைசூரு டர்பன் மற்றும் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். அதன்பின்னர் சின்னசாமி மைதானத்தில் நடக்கும் விழாவைக் காண முன்னதாக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஸ்டேடியத்திற்கு வெளியே திரண்டனர். கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த விழாவைக் காண ரசிகர்கள் ஏராளமாக திரண்டதால், ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ரசிகர்கள் அனைவரும் முண்டியடித்து கொண்டு ஓடினர்.

ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட பலரும் தரையில் விழுந்தனர். இதில், பலர் படுகாயமடைந்தனர். கூட்டத்தில் இருந்த டாக்டர்கள் சிலர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். நெரிசலில் சிக்கி மயங்கிய நிலையில் இருந்த ரசிகர்களை மீட்ட போலீசார் அருகில் உள்ள சிவாஜி நகர் பவுரிங் மருத்துவமனை, லேடி கர்சன் மருத்துவமனை, வைதேகி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். கூட்ட நெரிசலில் காயமடைந்த சிலரை போலீசார் தங்கள் ஜீப்பில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதில், ஒரு சிறுமி, 3 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் குழந்தைகள், பெண்கள் உட்பட 33 பேர் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர். ஆபத்தான் நிலையில் பலர் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் கூட வாய்ப்பு உள்ளது. இந்தநிலையில் இதேபோன்ற ஒரு சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதை மேற்கோள்காட்டி விராட் கோலியும் கைது செய்யப்படுவாரா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கடந்த டிசம்பர் 4-ந்தேதி புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியை ரசிகர்களுடன் பார்க்க, நடிகர் அல்லு அர்ஜுன் ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டருக்கு முன் அறிவிப்பு இல்லாமல் சென்ற போது மெகாஸ்டாரைப் பார்க்க ரசிகர்கள் முண்டியடித்ததால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு 35 வயதான ரேவதி என்ற பெண் உயிரிழந்ததார், அவரது மகன் நெரிசலில் காயமடைந்தார்.

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தியேட்டர் உரிமையாளர் உள்பட 3 பேரை ஏற்கனவே கைது செய்தனர். இந்நிலையில் இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வழங்குவதாக நடிகர் அல்லு அர்ஜுன் அறிவித்தார். இந்நிலையில் வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் பெயரும் சேர்க்கப்பட்டதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். கோர்ட் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இப்போது, ​​சமூக ஊடகங்களில் கேட்கப்படும் பெரிய கேள்வி என்னவென்றால், அதே வினோதமான நடவடிக்கை இங்கேயும் பயன்படுத்தப்படுமா? கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாததால் விராட் கோலி அல்லது ஆர்சிபி அணி வீரர்கள் அடுத்து கைது செய்யப்படுவார்களா? பாதுகாப்பு, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் திட்டமிடல் மற்றும் கட்டுப்பாட்டில் தெளிவாகத் தோல்வியடைந்ததற்கு அல்லு அர்ஜுனைப் போலவே RCB அணியும் பலிகடா ஆக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்க வேண்டிய சம்பவத்தில் பதினொரு உயிர்கள் பலியாகியுள்ள நிலையில், இந்த சம்பவம் நாடு முழுவதும் சீற்றத்தைத் தூண்டியுள்ளது.

Readmore: சிந்து நதி நீர் விவகாரம்!. இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயார்!. வெளியுறவு அமைச்சர் இஷாக் தார்!

KOKILA

Next Post

வியாழக்கிழமைகளில் வாழைப்பழத்தை தானம் கொடுத்தால் செல்வம் பெருகும்!. சூரியன் உதிக்குமுன் விஷ்ணு பகவானை வழிபடுங்கள்!

Thu Jun 5 , 2025
வியாழக் கிழமைகளில், சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்து குளித்து முடித்துவிட்டு, விஷ்ணு பகவானுக்கு விளக்கேற்றி, பூஜை செய்து வணங்க வேண்டும். விஷ்ணு பகவானை வணங்கிய பின் மஞ்சள் நிற பொருட்களை மற்றவர்களுக்கு தானம் வழங்க வேண்டும். வியாழக் கிழமைகளில் குருவை வணங்கி விரதம் இருந்து, சிவபெருமானுக்கு மஞ்சள் லட்டு செய்து, படைத்து வணங்க வேண்டும். சிவபெருமானை தரிசித்து முடிந்ததும், வாழை மரத்திற்கு மஞ்சள் நிறமுள்ள இனிப்பு பலகாரங்களை வைத்து படைத்து […]
vishnu thursday 11zon

You May Like