மீண்டும் பீதியை கிளப்பும் கொரோனா மரணங்கள்..!! ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு..!! இணை நோய் இருப்பவர்கள் உஷார்..!!

Corona 2025 1

இந்தியாவில் ஒரே நாளில் 7 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 564 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,866ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 114 பேருக்கும், கர்நாடக மாநிலத்தில் 112 பேருக்கும், மேற்கு வங்க மாநிலத்தில் 106 பேருக்கும் குஜராத் மற்றும் டெல்லியில் தலா 64 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தமாக 236 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மகாராஷ்டிராவில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லி, குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 7 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒரே நாளில் 581 பேர் பெருந்தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

தமிழ்நாட்டில் நேற்று வரை 236 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில், இணை நோய் இருப்பவர்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டுமென சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிவுறுத்தியுள்ளார். இதற்கிடையே, இணை நோய் பாதிப்பால் உயிரிழந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தாலும், அது கொரோனா மரணமாக கருதப்படாது என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Read More : அப்பா – மகன் பிரச்சனையை தீர்த்து வைக்கும் பாஜக..? அமித்ஷா போட்ட ஸ்கெட்ச்..!! வலையில் சிக்கும் ராமதாஸ்..!! வெளியாகிறது கூட்டணி அறிவிப்பு..!!

CHELLA

Next Post

அதிர்ச்சி..!! இனி இவர்களுக்கு உரிமைத்தொகை ரூ.1,000 வராது..!! 15,000 பேரை அதிரடியாக நீக்கிய திமுக அரசு..!! வெளியான பரபரப்பு காரணம்..!!

Thu Jun 5 , 2025
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தற்போது வரை 1.14 கோடி பேர் பயனடைந்து வருகின்றனர். குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கும் வகையில், “கலைஞர் மகளிர் உரிமைத்தொகை” திட்டத்தை கடந்த 2023ஆம் ஆண்டில் இருந்து திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்படி, தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் மாதம் ரூ.1,000 வரவு வைக்கப்படுகிறது. இந்நிலையில், இத்திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு நேற்று (04.06.2025) முதல் தமிழ்நாடு முழுவதும் 9,000 இடங்களில் சிறப்பு முகாம்கள் […]
1000 2025 2

You May Like