சத்தீஸ்கர் மாநில அரசு தற்போது உச்சநீதிமன்ற உத்தரவின் படி ஒரு திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில், பூபேஷ் பாகல் தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது. சென்ற வருடம் சதீஷ்கர் மாநில அரசால் தொடங்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வரும், பொது சேவைகள், பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான 58 சதவீத இட ஒதுக்கீடு முறையை அறிவித்திருக்கிறது.
ஆனாலும் கடந்த 1994 ஆம் வருடம் உச்சநீதிமன்ற வழங்கிய தீர்ப்பின்படி, 50 சதவீத இட ஒதுக்கீடு உச்சவரம்பை மீறுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று மாநில உயர்நீதிமன்றம் தெரிவித்தது. இதனை எதிர்க்கும் விதமாக, மேல்முறையீடு வழக்குகள், உச்ச நீதிமன்றத்தில், தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த மே மாதம் ஒன்றாம், தேதி இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அந்த உத்தரவில், மாணவர் சேர்க்கையில் 58 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அனுமதி வழங்கப்படுவதாக தெரிவித்தது.உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தற்போது, கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் சேர்க்கையில், அமல்படுத்த, அந்த மாநில அரசு முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.