குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டியை 6 சதவீதத்தில் இருந்து 5.5 சதவீதமாக ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. இதனால், வீடு, வாகன மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும். இத்துடன், இந்த ஆண்டில் 3-வது முறையாக ரெப்போ வட்டி குறைக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை மறு சீராய்வு கூட்டம் நடத்தி, ரெப்போ வட்டி விகிதம் குறித்து முடிவு செய்கிறது.
இந்நிலையில், நடப்பு மாதத்துக்கான கூட்டம் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் கடந்த வாரம் நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகள் படி, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் அரை சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வீடு, வாகன மற்றும் தனி நபர் கடன்களுக்கான EMI குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வட்டிக் குறைப்பு ஜூன் 7-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
அந்த வகையில், HDFC, பேங்க் ஆஃப் பரோடா வங்கிகளும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை கணிசமாக குறைப்பதாக அறிவித்துள்ளன. இதனால், தனிநபர், வீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறைவதால், EMI கட்டுபவர்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொள்ளலாம். பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் திருத்தப்பட்ட BRLLR விகிதம் ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்தை 6.00 சதவீதத்திலிருந்து 5.50 சதவீதமாகக் குறைப்பதாக பேங்க் ஆஃப் பரோடா வங்கி தெரிவித்துள்ளது.
இதன் மூலம் வாடிக்கையாளர்கள் குறைந்த வட்டியில் கடன் வாங்க முடியும். தற்போது பேங்க் ஆஃப் பரோடா வங்கி வட்டியைக் குறைத்துள்ள நிலையில் மற்ற வங்கிகளும் ஒவ்வொன்றாக தங்களுடைய வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read more: கடவுளுக்கு உடைக்கும் தேங்காய் அழுகியிருந்தால் நன்மையா?. பூ இருந்தால் என்ன அர்த்தம்?