உலகளவில் மக்கள் அனைவராலும் பயன்படுத்தப்பட்டும் வரும் புரவுசராக கூகுள் குரோம் உள்ளது. ஆனால், கூகுள் குரோமில் உள்ள பாதுகாப்பு குறைபாடு காரணமாக உங்கள் கணினியை தாக்க கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கூகுள் திரெட் அனலிசிஸ் குரூப் மூலம் இந்த மிகப்பெரிய குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி பயனர்களின் அனுமதியின்றி ஹேக்கர்கள் கணினியில் பல தீய நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குரோம் புரோசரில் உள்ள வி8 ஜாவா ஸ்கிரிப்ட் இன்ஜினில் ஆபத்தான செயல்முறைகளை செய்வதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது விண்டோஸ், லினக்ஸ் மற்றும் மேக் ஓஎஸ் உள்ளிட்ட பல ஓஎஸ்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இதற்கு தீர்வு காணும் வகையில், புதிய அப்டேட் மே 28, 2025 அன்று வெளியிடப்பட்டது. ஆனால், பலருக்கும் இது குறித்து விழிப்புணர்வு இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், அவர்கள் லேப்டாப், கணினி ஆகியவை ஆபத்தை சந்திக்கலாம்.
உங்கள் குரோம் பாதுகாப்பாக இருக்கிறா..?
நீங்கள் பயன்படுத்தும் கூகுள் குரோமில் செட்டிங்கிற்கு சென்று About Google Chrome என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அதில், உங்கள் Chrome பதிப்பு 137.0.7151.68 அல்லது அதற்கு மேல் இருந்தால், உங்கள் சாதனம் பாதுகாப்பாக இருக்கிறது என்று அர்த்தம். அதற்கு குறைவாக இருந்தால், குரோம் தானாகவே புதிய அப்டேட் செய்து கொள்ளும். ஆனால், சில நேரங்களில் அதனை நீங்களே அப்டேட் செய்ய வேண்டியிருக்கும். எனவே, கூகுள் குரோமை உடனே அப்டேட் செய்து உங்கள் கணினி, லேப்டாப்புக்களை காப்பாற்றிக் கொள்ளுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.