16 வயது சிறுவனுடன் மூன்று மாத காலமாக திகட்ட, திகட்ட உல்லாசம் அனுபவித்த 27 வயது இளம்பெண் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியை சேர்ந்த 27 வயது பெண் ஒருவர், அதே பகுதியில் 11 ஆம் வகுப்பு படித்து வரும், 16 வயது சிறுவனுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அந்த சிறுவனின் பெற்றோர் கூலி வேலை பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் தான், அந்த சிறுவனின் அண்டை வீட்டில் 27 வயதான இளம் பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். மேலும், அந்த சிறுவனும், 27 வயது இளம்பெண்ணும் உறவினர்கள் என்று சொல்லப்படுகிறது. அதோடு, அந்த 27 வயது இளம்பெண் மூன்று குழந்தைகளுக்கு தாய் என்றும் சொல்லப்படுகிறது.
அந்த இளம் பெண்ணின் கணவர் ஓட்டுனராக பணியாற்றுவதால், அடிக்கடி வெளியூருக்கு சென்று விடுவார். அந்த சிறுவனும், இளம்பெண்ணும் உறவினர்கள். ஆகவே, அடிக்கடி இருவரும் சந்தித்துள்ளனர். இவர்களுக்கிடையில் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர்.
இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்ததால், தொடர்ந்து, அந்த இளம் பெண்ணும், மாணவனும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில தினங்களாக அந்த மாணவனின் உடல்நிலை பாதிக்கப்பட்டு, அந்த மாணவன் சோர்வாக காணப்பட்டுள்ளார். இதனால், சந்தேகம் அடைந்த அவருடைய பெற்றோர், இது தொடர்பாக மாணவரிடம் கேள்வி எழுப்பி உள்ளனர்.
பெற்றோர்கள் அது பற்றி கேட்டவுடன், தயங்கி, தயங்கி பேசத் தொடங்கிய அந்த மாணவர், மூன்று மாதங்களாக தன்னை மிரட்டி, அந்த இளம் பெண் பாலியல் உறவு கொண்டார் என்று தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மானாமதுரை காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருக்கிறார்கள். ஆகவே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, பதினோராம் வகுப்பு மாணவரை மிரட்டி உல்லாசம் அனுபவித்த அந்த இளம் பெண்ணை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.