விஜய் கட்சியுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு கரூரில் தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்துப் பேசியுள்ளார்.
நேற்று கரூரில் நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்ற பிரேமலதா விஜய்காந்த் அங்குள்ள தனியார் ஹோட்டலில் தங்கினார். இன்று காலை கரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் என்பது ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக முடிவு செய்யப்பட்ட ஒன்று. ஆனால், அதில் எந்த ஆண்டு என்பதை குறிப்பிடவில்லை. இந்த விஷயத்தில் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுப்பதை விட, தனது வாக்குறுதிதான் முக்கியம் என்று எடப்பாடி பழனிச்சாமி எங்களிடம் தெரிவித்துள்ளார்.
விஜய் கட்சியுடன் கூட்டணியாகும் வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்வி எழுந்தது. அதற்கு பதிலளிக்க அவர்: “அந்த கேள்வியை விஜய்யிடமே கேளுங்கள். அதற்கு அவர்தான் பதிலளிக்கவேண்டும்” என கூறினார். விஜய் கட்சியுடன் கூட்டணியா என்ற கேள்வியை நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும். அதற்கு அவர்தான் பதில் சொல்லவேண்டும். 2026-ல் கூட்டணி ஆட்சி வந்தால் நல்லதுதான். அப்போதுதான் தப்பு நடந்தால் ஒரு எதிர்க்கட்சியாக சுட்டிக்காட்ட முடியும்.
திமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானத்திற்கு நாங்கள் வரவேற்பு அளித்தது அரசியல் நாகரீகம். 234 தொகுதிகளுக்கும் 2 நாள்களில் கூட்டம் நடத்தப்பட்டு, பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். கரூர் மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள மணல் கொள்ளை, 24 மணி நேர மதுவிற்பனை, கள்ள லாட்டரி, கனிமவளக் கொள்ளை ஆகியவை முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என அவர் தெரிவித்தார். “தனியாக வாழும் முதியோருக்கு பாதுகாப்பில்லை. கொல்லை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதை அரசு விரைவில் சரிசெய்ய வேண்டும்” எனவும் வலியுறுத்தினார்.
Read more: தவெகவில் இணைந்த IRS அருண்ராஜ்-க்கு கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் பதவி..!!