9 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன் ரத்தம் கசிந்த நிலையில், ஒரு சூட்கேஸ் கண்டெடுக்கப்பட்டது. அதில், சிறுமி ஒருவரின் உடல் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
முதற்கட்ட விசாரணையில், சிறுமியின் முகத்தில் காயங்களும், பலாத்காரம் செய்யப்பட்டதற்கான அடையாளங்களும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுமி தன் உறவினர் வீட்டுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, இரண்டு மணி நேரமாக வீட்டிற்கு திரும்பாததால், பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர், பக்கத்து வீட்டுக்குச் சென்றதாக சிலர் கூறியதால், அங்கு சென்று வீட்டின் பூட்டிய கதவை உடைத்து சிறுமியின் தந்தை உள்ளே சென்றார். அங்கு, சூட்கேஸில் ரத்த வெள்ளத்தில், அரைகுறை ஆடையுடன் தன் மகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இச்சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த சில சிறுவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், குற்றவாளிகளைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.