மத்திய பணியாளர் தேர்வாணையம் காலி பணியிடங்களுக்கான 13-வது கட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
மத்திய பணியாளர் தேர்வாணையம் “காலி பணியிடங்கள் 2025”-க்கான 13-வது கட்ட தேர்வு குறித்த அறிவிப்பை 02.06.2025-ம் தேதி வெளியிட்டுள்ளது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைந்துள்ள மத்திய அரசின் அமைச்சகங்கள்,துறைகள், அமைப்புகளால் அறிவிக்கப்படும் பல்வேறு காலி பணியிடங்களுக்கு நேரடி ஆட்சேர்ப்பு செய்வதற்கான கணினி அடிப்படையிலான போட்டித் தேர்வை வெளிப்படையான முறையில் ஆணையம் நடத்துகிறது.
பதவி, வயது வரம்பு, அத்தியாவசிய கல்வித் தகுதி, செலுத்த வேண்டிய கட்டணம், தேர்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பில் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையதளம் https://ssc.gov.in அல்லது mySSC மொபைல் செயலி மூலம் ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை ஆன்லைன் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 23.06.2025 ஆகும். ஆன்லைன் வாயிலாக கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி 24.06.2025 ஆகும்.
தென் மண்டலத்தில், கணினி அடிப்படையிலான தேர்வு ஜூலை 24-ம் தேதி முதல் ஆகஸ்ட் 04-ம் தேதி வரை (உத்தேசமாக) 24 மையங்கள்/நகரங்களில் நடைபெறும்: ஆந்திராவில் 12 மையங்களிலும், புதுச்சேரியில் 01 மையத்திலும், தமிழ்நாட்டில் 08 மையங்களிலும், தெலுங்கானாவில் 03 மையங்களிலும் இந்த தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.