Job: 13-வது கட்ட தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஜூன் 23-ம் தேதி கடைசி தேதி…!

Central 2025

மத்திய பணியாளர் தேர்வாணையம் காலி பணியிடங்களுக்கான 13-வது கட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

மத்திய பணியாளர் தேர்வாணையம் “காலி பணியிடங்கள் 2025”-க்கான 13-வது கட்ட தேர்வு குறித்த அறிவிப்பை 02.06.2025-ம் தேதி வெளியிட்டுள்ளது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைந்துள்ள மத்திய அரசின் அமைச்சகங்கள்,துறைகள், அமைப்புகளால் அறிவிக்கப்படும் பல்வேறு காலி பணியிடங்களுக்கு நேரடி ஆட்சேர்ப்பு செய்வதற்கான கணினி அடிப்படையிலான போட்டித் தேர்வை வெளிப்படையான முறையில் ஆணையம் நடத்துகிறது.


பதவி, வயது வரம்பு, அத்தியாவசிய கல்வித் தகுதி, செலுத்த வேண்டிய கட்டணம், தேர்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பில் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையதளம் https://ssc.gov.in அல்லது mySSC மொபைல் செயலி மூலம் ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை ஆன்லைன் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 23.06.2025 ஆகும். ஆன்லைன் வாயிலாக கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி 24.06.2025 ஆகும்.

தென் மண்டலத்தில், கணினி அடிப்படையிலான தேர்வு ஜூலை 24-ம் தேதி முதல் ஆகஸ்ட் 04-ம் தேதி வரை (உத்தேசமாக) 24 மையங்கள்/நகரங்களில் நடைபெறும்: ஆந்திராவில் 12 மையங்களிலும், புதுச்சேரியில் 01 மையத்திலும், தமிழ்நாட்டில் 08 மையங்களிலும், தெலுங்கானாவில் 03 மையங்களிலும் இந்த தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

கோயம்பேடு மார்க்கெட்டில் பாதியாய் குறைந்த காய்கறி விலை..!! குஷியில் சென்னைவாசிகள்..

Thu Jun 12 , 2025
தமிழகத்தின் மிகப்பெரிய காய்கறி மார்க்கெட்டான கோயம்பேடு சந்தையில் இன்றைய தினம் காய்கறி விலை குறைந்ததால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் பெய்து வந்த கோடை மழையின் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்படும் காய்கறிகளின் விளைச்சல் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக, கடந்த வாரங்களில் காய்கறி விலை உயர்வு ஏற்பட்டது. விலை உயர்ந்தாலும் பொதுமக்கள் காய்கறி வாங்குவதில் ஆர்வம் காட்டி வந்தனர். ஏனென்றால் இன்னும் விலை அதிகரிக்குமோ என்ற அச்சம் […]
Vegetable Market

You May Like