விமான விபத்து!. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக உதவி மையத்தை அமைத்தது ஏர் இந்தியா!.

ASHISH WEBSITE 16 2 2

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு உதவும் வகையில் உதவி மையங்களை ஏர் இந்தியா அமைத்துள்ளது.


குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் நேற்று மதியம் 1.38 மணியளவில் லண்டனுக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் 230 பயணிகள், 10 பணியாளர்கள் மற்றும் 2 விமானிகள் என மொத்தம் 242 பேர் இருந்தனர். விமானத்தை சபீர் சபர்வால் என்ற விமானி ஓட்டினார். அவருக்கு துணையாக கிளைவ் குந்த் என்ற துணை விமானியும் இருந்தார்.

இந்த விமானம் வானில் பறந்த ஒரு சில நிமிடங்களிலே அதாவது தரையில் இருந்து 825 அடி உயரத்தை எட்டியபோது விமானியிடம் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு ‘மே டே அழைப்பு’ வந்தது. ‘மே டே அழைப்பு’ என்பது சர்வதேச அளவில் அபாயத்தை தெரிவிக்கவும் உடனடி உதவி வேண்டும் என்பதைக் குறிக்கும் ரேடார் சிக்னலாகும்.

இதனை ஏற்றுக்கொண்ட கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், மீண்டும் விமானியை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் விமானத்தில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் அவர்களால் விமானியை தொடர்பு கொள்ள இயலவில்லை. இதற்கிடையே, சில நிமிடங்களில் அந்த விமானம் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேரும் உயிரிழந்தனர். விமான விபத்து குறித்து பல்வேறு நாட்டுத் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த கோர விபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டியில் பதிவாகி இருக்கும் தகவல்களை ஆராய்ந்து பார்த்தாதான், கடைசி நேரத்தில் என்ன நடந்தது என்பதும், விபத்துக்கான காரணமும் தெரியவரும். எனவே அந்த கருப்பு பெட்டியை கைப்பற்றும் முயற்சியில் மீட்புக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், விமானத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும், அவர்களுக்கு ஆதரவளிக்கவும், அகமதாபாத், மும்பை, டெல்லி மற்றும் கேட்விக் விமான நிலையங்களில் உதவி மையங்களை ஏர் இந்தியா அமைத்துள்ளது. இந்த மையங்கள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் அகமதாபாத்திற்கு பயணிக்க உதவும்.

இந்தியாவிற்குள் இருந்து அழைப்பவர்களுக்கான பிரத்யேக பயணிகள் ஹாட்லைன் எண்: 1800 5691 444; மற்றும் வெளிநாடுகளில் இருந்து அழைப்பவர்களுக்கான பிரத்யேக பயணிகள் ஹாட்லைன் எண்: +91 8062779200. மேலும் (https://x.com/airindia) மற்றும் http://airindia.com ஆகியவற்றில் உடனடியாக தகவல்களை பெறலாம் என தெரிவித்துள்ளது.

Readmore: ஈரான் – இஸ்ரேல் பதற்றம்!. பயணத்தை தவிருங்கள்; விழிப்புடன் இருங்கள்!. இந்திய தூதரகம் அறிவுறுத்தல்!.

KOKILA

Next Post

கடந்த 10 வருடங்களில் அதிக மக்கள் பின்பற்றும் மதம் இதுதான்.. இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது கிறிஸ்துவம்..!!

Fri Jun 13 , 2025
உலகம் முழுவதும் பல்வேறு மதங்கள் வளர்ந்து வருகிறது. பியூ ஆராய்ச்சி மையத்தின் அறிக்கையின்படி, இஸ்லாம் உலகின் வேகமாக வளர்ந்து வரும் மதமாகும். 2010 முதல் 2020 வரையிலான 10 ஆண்டுகளில் முஸ்லிம்களின் மக்கள் தொகை 347 மில்லியன் (34.7 கோடி) அதிகரித்துள்ளது. ஆய்வின்படி, கிறிஸ்தவம் இரண்டாவது வேகமாக வளர்ந்து வரும் மதமாகக் கண்டறியப்பட்டுள்ளது, அதே நேரத்தில் எந்த மத தொடர்பும் இல்லாத மக்கள் மூன்றாவது வேகமாக வளர்ந்து வரும் குழுவாக […]
people 1

You May Like