தன்னை இளைய காமராஜர் என்று அழைக்க வேண்டாம் என்று தவெக கல்வி விருது வழங்கும் விழாவில் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தவெக சார்பில் இன்று 3வது கட்ட கல்வி விருது வழங்கும் விழா இன்று நடைபெற்று வருகிறது. மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் இந்த விழா நடந்து வருகிறது. 10 மற்றும் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை விஜய் வழங்குகிறார்..
இந்த விழா தொடங்கி உடன், அகமதாபாத் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அகமதாபாத் விமான விபத்து காட்சிகளை பார்க்கும் மனம் பதறுகிறது என்று விஜய் கூறினார். மேலும் இந்த விழாவில் 2026 தேர்தல் பற்றி பேச வேண்டாம் என்று விஜய் கோரிக்கை வைத்துள்ளார்.
2026 தேர்தல் பற்றியோ, இளைய காமராஜர் என்று என்னை அழைக்க வேண்டும்.. ஆசிரியர்கள், பள்ளி பற்றியோ மற்ற விஷயங்களை பற்றி பேசுங்கள். தயவுசெய்து இதுபோன்று பேச வேண்டாம்.” என்று தெரிவித்தார்.
முன்னதாக நேற்று அகமதாபாத் ஏர் விமான விபத்து குறித்து தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவரின் பதிவில் ” அகமதாபாத்தில் 242 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் மிகுந்த வருத்தம் அடைகிறேன். துயரத்தில் உள்ள குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.” என்று பதிவிட்டிருந்தார்.
முன்னதாக நேற்று மதியம் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 12 பணியாளர்கள் உட்பட 242 பேருடன் லண்டன் புறப்பட்ட போயிங் 787-8 ட்ரீம்லைனர் ஏர் இந்தியா விமானம் சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 297 ஆக உயர்ந்துள்ளது. விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே ஒரு பயணி மட்டுமே இந்த துயரச் சம்பவத்தில் உயிர் பிழைத்தார். இறந்தவர்களில் 229 பேர் பயணிகள் மற்றும் 12 பேர் விமானப் பணியாளர்கள் ஆவர். மேலும், விமானம் ஒரு மருத்துவக் கல்லூரியின் விடுதியில் மோதியதில், அந்த நேரத்தில் அங்கிருந்த 56 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : பள்ளி & கல்லூரி மாணவர்கள் அரசு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்…! சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!